முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மாவட்டத்தில் மாணவ-மாணவிகள் பிளஸ் டூ தேர்வில் 92.46 சதவீதம் தேர்ச்சி

புதன்கிழமை, 16 மே 2018      மதுரை
Image Unavailable

மதுரை, -மதுரை மாவட்டத்தில் பிளஸ் டூ தேர்வில் 92.46 மாணவ - மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் மதுரை, உசிலம்பட்டி, மேலூர் ஆகிய 3 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இந்த 3 கல்வி மாவட்டத்தில் 18,245 மாணவர்களும், 19,788 மாணவிகளும் மொத்தம் 38,033 பேர் இந்தாண்டு தேர்வு எழுதினர். இதில் 16,078 மாணவர்களும், 19,086 மாணவிகளும் மொத்தம் 35,164 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 92.46 சதவீதமாகும். இந்தாண்டு தேர்ச்சி கடந்த ஆண்டை விட 1.5 சதவீதம் குறைவானதாகும்.கடந்தாண்டு மதுரை மாவட்டத்தில் பிளஸ் டூ தேர்வில் 93.61 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
மதுரை கல்வி மாவட்டத்தில் 8926 மாணவர்களும் 9868 மாணவிகளும் மொத்தம் 18,794 பேர் தேர்வு எழுதினர். இதில் 7,965 மாணவர்களும் 9,558 மாணவிகளும் ஆக மொத்தம் 17,523 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மதுரை கல்வி மாவட்டத்தில் 93.24 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மேலூர் கல்வி மாவட்டத்தில் 5,333 மாணவர்களும், 6,075 மாணவிகளும் மொத்தம் 13,408 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 4,573 மாணவர்களும், 5,816 மாணவிகளும் ஆக மொத்தம் 10,389 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 85.75 சதவீதமாகும்.
உசிலம்பட்டி கல்வி மாவட்டத்தில் 3,986 மாணவர்களும்,3,845 மாணவிகளும் ஆக மொத்தம் 7,831 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 3,540 மாணவர்களும் 3,712 மாணவிகளும் ஆக மொத்தம் 7,252 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 88.81 சதவீதமாகும்.
மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் ஒட்டப்பட்டிருந்தன. இதனை ஏராளமான மாணவ,மாணவிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டு தேர்வு முடிவுகளை தெரிந்து கொண்டனர். சில மாணவ, மாணவிகள் தனது செல்போனில் இணைய தளம் மூலம் தேர்வு முடிவுகளை பள்ளி வளாகத்திலே ஆர்வத்துடன் பார்த்து சென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து