முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை தனியார் வங்கி இன்சூரன்ஸ் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து

வெள்ளிக்கிழமை, 18 மே 2018      மதுரை
Image Unavailable

மதுரை, - மதுரை கே.கே.நகரில் உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் இன்சூரன்ஸ் அலுவலகத்தில் நேற்று  திடீர் தீ விபத்து ஏற்பட்டது. ஆவணங்கள் எரிந்து சாம்பலாயின.
மதுரை கே.கே.நகர் 100 அடி சாலையில் வணிக வளாகம் அருகே ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் இன்சூரன்ஸ் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று காலை வங்கியின் 2-வது தளத்தில் திடீரென தீப்பிடித்தது. இந்த தீ விபத்தில் முக்கிய ஆவணங்கள், ஷேர், டேபிள், பர்னிச்சர் உள்ளிட்டவை எரிந்து சாம்பலாயின.
இந்த விபத்து குறித்து உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்து 4 தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மின்கசிவு காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.  தீ விபத்து குறித்து அண்ணாநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து