முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரியகுளத்தில் அகில இந்திய கூடைப்பந்தாட்ட போட்டி போபால், பெங்களுரு அணிகள் லீக் சுற்றுக்கு தகுதி

வெள்ளிக்கிழமை, 18 மே 2018      தேனி
Image Unavailable

தேனி -  பெரியகுளத்தில் சில்வர் ஜுபிலி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் பி.டி.சிதம்பரசூரிய நாராயணன் நினைவு சுழற்கோப்பைக்கான 59வது அகில இந்திய கூடைப்பந்தாட்ட போட்டிகள் பி.எஸ். துரைராம சிதம்பரம் நினைவு மின்னொளி அரங்கில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற நான்காவது போட்டியில் விஜயா வங்கி அணியை ஈ.எம்.ஈ போபால் அணி 65-59 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. நேற்று காலையில் நடைபெற்ற முதல் போட்டியில் தெலுங்கான அணி சென்னை விளையாட்டு விடுதி அணியை 96-92 என்ற புள்ளிகணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் திருவனந்தபுரம் மின்சார வாரிய அணி சென்னை தெற்கு ரயில்வே அணியை 71-36 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்தது. மாலையில் நடைபெற்ற காலுறுதியின் முதல் போட்டியில் சென்னை அரைஸ் ஸ்டீல்ஸ் அணியும் பெங்களுரு ஏ.எஸ்.சி அணியும் மோதியது. பரபரப்பான இப்போட்டியில் பெங்களுரு அணி 90-88 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் வாரணாசி டீசல் லோகோ அணியை ஈ.எம்.ஈ போபால்  அணி 65-57 என்ற வென்றது. இதன் மூலம் லீக் சுற்றுக்கு பெங்களுரு ஏ.எஸ்.சி அணி, போபால் ஈ.எம்.ஈ அணி தகுதி பெற்றது.  நாளை முதல் லீக் சுற்று போட்டிகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து