முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரியாவிலிருந்து வெளிநாட்டுப் படைகள் விரைவில் வெளியேறும்: ரஷ்ய அதிபர் புடின்

ஞாயிற்றுக்கிழமை, 20 மே 2018      உலகம்
Image Unavailable

மாஸ்கோ: சிரியாவிலிருந்து வெளிநாட்டுப் படைகள் விரைவில் வெளியேறும் என்று ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பான செய்தியை சிரிய அரசு ஊடகமான சனா வெளியிட்டுள்ளது. சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத்தின் திடீர் ரஷ்ய சந்திப்பில் புடின் இதனை தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து புடின் கூறும் போது,

பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் கிடைந்த வெற்றிகளையும், பயங்கரவாதத்துக்கு எதிரான சிரிய ராணுவத்தின் வெற்றிகளையும் நாங்கள் தொடர்புப்படுத்தியே பார்கிறோம். விரைவில் வெளிநாட்டுப் படைகள் சிரியா பிராந்தியதிலிருந்து வெளியேறும் என்றார்.

சிரியாவின் அதிபர் பஷார் அல் ஆசாத் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் 2014-ம் ஆண்டு முதல் சண்டையிட்டு வருகின்றனர். சுமார் ஆறு ஆண்டுகளாக நடக்கும் சிரிய போரில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவும், பஷார் அல் ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்யாவும் ஆதரவு அளித்து வந்தனர். கடந்த ஆறு மாதங்களில் உள்நாட்டு போர் தீவிரமானது, இதில் சிரிய ராணுவத்தினர் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிலிருந்து பல பகுதிகளை கைப்பற்றியுள்ளனர். இன்னும் எஞ்சிய பகுதியிலுள்ள கிளர்ச்சியாளர்கள் தங்கள் பகுதியிலிருந்து வெளியேறி வருகின்றனர். சிரியா உள் நாட்டு போரில் ரஷ்ய படைகளின் உதவியுடன் பஷார் தலைமையிலான அரசு குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து