முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐதராபாத்-சென்னை அணிகள் மோதும் பிளே ஆப் சுற்று முதல் தகுதி ஆட்டம் - மும்பையில் இன்று நடக்கிறது

திங்கட்கிழமை, 21 மே 2018      விளையாட்டு
Image Unavailable

மும்பை : ஐதராபாத்-சென்னை அணிகள் இடையிலான பிளே ஆப் சுற்று முதல் தகுதி ஆட்டம் இன்று மும்பையில் நடக்கிறது.

ஐ.பி.எல் கிரிக்கெட் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் பிளே ஆப் சுற்றுக்கு ஐதராபாத், சென்னை, கொல்கத்தா, ராஜஸ்தான் உள்ளிட்ட அணிகள் தகுதி பெற்றுள்ளன. மும்பை, பஞ்சாப், டெல்லி, பெங்களூரு அணி வெளியேறி விட்டன.

புள்ளிகள் பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருந்த ஐதராபாத், சென்னை ஏற்கெனவே தகுதி பெற்று விட்ட நிலையில் மீதமுள்ள 2 இடங்களுக்கு மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, ராஜஸ்தான், பஞ்சாப் அணிகள் போட்டியிட்டன. இதில் டெல்லி அணியிடம் தோல்வியுற்றதால் பெங்களூரு, மும்பை தகுதி பெறவில்லை. சென்னையிடம் தோல்வியடைந்த பஞ்சாபும் வெளியேறியது.

இதற்கிடையே பிளே ஆப் சுற்றின் முதல் தகுதிப் போட்டி மும்பையில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது. இதில் ஐதராபாத்-சென்னை அணிகள் மோதுகின்றன. நாளை கொல்கத்தா-ராஜஸ்தான் மோதும் எலிமினேட்டர் ஆட்டம் கொல்கத்தாவில் இரவு நடக்கிறது. 25-ம் தேதி வெள்ளிக்கிழமை கொல்கத்தாவில் இரண்டாவது தகுதி ஆட்டமும், 27-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மும்பையில் இறுதி ஆட்டமும் நடக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து