முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏமனில் ஹவுதி படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 5 பேர் பலி

செவ்வாய்க்கிழமை, 22 மே 2018      உலகம்
Image Unavailable

ரியாத்: ஏமனில் ஹவுதி படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் பொதுமக்களில் 5 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏமனில் அரசுக்கு எதிராக 2015 முதல் ஹவுதி இயக்கம் செயல்பட்டு வருகிறது. ஈரான் ஆதரவுடன் கடந்த 3 ஆண்டுகளாக ஹவுதி இயக்கத்தினர் நடத்தி வரும் உள்நாட்டு போரில் 10 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 22 மில்லியன் மக்களுக்கு நிவாரண உதவி தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஏமனின் மேரிப் நகரில் ஹவுதி இயக்கத்தினர் கத்யூஷா ரக ஏவுகணைகளை கொண்டு பொதுமக்கள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் பொதுமக்களில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் 22 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி சவுதி அரேபியாவுக்கு சொந்தமான அல் அரேபியா ஊடகம் நேற்று வெளியிட்டு உள்ள தகவலில், மேரிப் நகரில் குடியிருப்புவாசிகளை இலக்காக கொண்டு ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து