முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீடியோ: திருச்செந்தூர் அருகே சிறுவர்களை கடத்த முயன்ற நபர்களை பொதுமக்கள் சிறை பிடித்தனர்

செவ்வாய்க்கிழமை, 22 மே 2018      தமிழகம்
Image Unavailable

திருச்செந்தூர் அருகே சிறுவர்களை கடத்த முயன்ற நபர்களை பொதுமக்கள் சிறை பிடித்தனர் திருச்செந்தூர் அருகேயுள்ள அமலிநகரில் சிறுவர்களை கடத்த முயன்ற நபர்களை பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். திருச்செந்தூர் அருகேயுள்ள அமலிநகர் மீனவ கிராமாகும். 2000 குடும்பங்கள் உள்ளது. அப்பகுதி கடற்கரையில் ஆஸ்டின்-13, மற்றும் இன்பதாஸ்-13, இரண்டு சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்த போது வந்த மர்ம நபர்கள் ஆஸ்டின் முகத்தில் துண்டால் மூடி கடத்த முயன்றுள்ளனர். அப்போது மற்றொரு சிறுவன் இன்பதாஸ் கூச்சலிட்டு அங்கிருந்து தப்பி ஓடி அப்பகுதி ஊர் மக்களிடம் தெரிவித்துள்ளான். இதனால் பொதுமக்கள் ஒன்று திரண்டு மர்மநபர்கள் மூன்று பேர்களை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். காவல்துறையினர் விசாரித்ததில் கோவில்பட்டி இலுப்பையூரணி சேர்ந்த மாரிமுத்து, மகேஸ்வரன், சென்பராமன் என தெரியவந்துள்ளது. தொடர்ந்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக குழந்தைகள் கடத்தல்தொடர்பாக சமூக வலைதளத்தில் பல்வேறு வதந்திகள் பரவி வந்த நிலையில், சிறுவர்களை கடத்த முயன்ற இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து