முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடகத்தில் புதிய அரசு பதவியேற்பதற்கு முன்பே காங்கிரசில் பதவிக்காக வெடிக்கும் உட்கட்சி பூசல்

செவ்வாய்க்கிழமை, 22 மே 2018      இந்தியா
Image Unavailable

பெங்களூர்: கர்நாடகாவில் புதிய அரசு பதவியேற்பதற்கு முன்பாகவே காங்கிஸ் கட்சியில் உட்கட்சிப் பூசல் வலுத்துள்ளது. எம்.பி.பாட்டீலுக்கு அமைச்சர் பதவி அளித்தால் ராஜினாமா செய்யப் போவதாக இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

மத சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி அரசின் சார்பில் கர்நாடகத்தின் புதிய முதல்வராக பதவியேற்க இருக்கும் ம.ஜ.த மாநிலத் தலைவர் எச்.டி.குமாரசாமி, பெங்களூரில் இன்று மாலை 4.30 மணிக்கு பதவியேற்கவுள்ளார். நாளை பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கவும் திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் டெல்லி சென்ற குமாரசாமி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் சோனியாவை சந்தித்து, கர்நாடக அமைச்சரவை இலாகாக்களை இறுதி செய்துள்ளார். மேலும் துணை முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்டோரின் பெயர்கள் கர்நாடக காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசித்த பிறகு அறிவிக்கப்படும் என்றும் குமாரசாமி தெரிவித்தார்.

இந்நிலையில், குமாரசாமி தலைமையிலான அரசு பதவியேற்பதற்கு முன்பாகவே காங்கிரஸ் கட்சியில் உட்கட்சிப் பூசல் வலுத்து வருகிறது. எம்.பி.பாட்டீலுக்கு அமைச்சர் பதவி அல்லது துணை முதல்வர் பதவி அளித்தால் ராஜினாமா செய்யப் போவதாக, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களான சிவானந்த பட்டீல், யஷ்வந்த் ஆகியோர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனை முன்னாள் முதல்வர் சித்தராமையாவுடனான சந்திப்பின் போது தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இதே போல், தங்கள் சமூகத்தினருக்கு 5 அமைச்சர் பதவியும் துணை முதல்வர் பதவியும் தராவிட்டால் ராஜினாமா செய்யப்போவதாக, லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் சித்தராமையாவிடம் முறையீட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து