முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தூத்துக்குடியில் அமைதி திரும்ப மக்கள் ஒத்துழைக்க வேண்டும் ராஜ்நாத் சிங் வேண்டுகோள்

வியாழக்கிழமை, 24 மே 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: தூத்துக்குடியில் அமைதி திரும்ப மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் மோதல் கலவரமாக மாறியது. இதையடுத்து தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் வன்முறை பரவாமல் இருக்க தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போராட்டத்தின் போது கலவரத்தில் ஈடுபட்டதாக 78 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது டுவிட்டர் பக்க பதிவில் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் நடந்த விலைமதிப்பற்ற உயிர்களின் இழப்புக்கு தான் மிகவும் வேதனைப்படுகிறேன். தூத்துக்குடியில் நிலவி வரும் சூழ்நிலை குறித்து அறிய, சம்பவம் தொடர்பாக மாநில அரசாங்கத்திடம் அறிக்கை ஒன்று கேட்டுள்ளோம். துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். தூத்துக்குடி மக்கள் அனைவரும் அமைதி திரும்ப ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அதில் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து