முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடியுடன் நெதர்லாந்து பிரதமர் மார்க் டூட்டே சந்திப்பு

வியாழக்கிழமை, 24 மே 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி: நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டே இரண்டு நாள் பயணமாக நேற்று காலை இந்தியா வந்தார். அவருடன் நெதர்லாந்து துணை பிரதமர் மற்றும் சில முக்கிய அமைச்சர்களும் வந்துள்ளனர். இந்தியா வந்த மார்க் ருட்டே, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதார மற்றும் அரசியல் உறவுகளை மேபடுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதையடுத்து, மார்க் ருட்டே டெல்லியில் நடைபெற உள்ள தலைமை நிர்வாக அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். இந்த கூட்டத்தில் 130 நாடுகளை சேர்ந்த 231 தொழிலதிபர்கள் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த பயணத்தின் போது நெதர்லாந்து பிரதமர் பெங்களூருவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துக்கு செல்வார் என்றும் கூறப்பட்டுள்ளது. மார்க் ருட்டே இந்தியாவுக்கு வருவது இது இரண்டாவது முறையாகும் முன்னதாக கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் அவர் இந்தியா வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து