எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : 2013-ல் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா எத்தகைய பணிகளை மேற்கொண்டாரோ அந்த பணிகளை அவரது வழியில் தற்போது அரசு தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைசெயலகத்தில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-
உரிமம் ரத்து
மறைந்த முதல்வர் ஜெயலலிதா காலத்திலேயே 2013-ஆம் ஆண்டு மார்ச் 23-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலை அருகில் வசிக்கும் பொதுமக்களிடமிருந்து புகார் வந்தது. அந்தப்புகாரின் அடிப்படையிலே கடந்த 2013 ஆம் ஆண்டு மார்ச் 29-ம் தேதி, ஸ்டெர்லைட் ஆலைக்கு கொடுக்கப்பட்டுள்ள மின்இணைப்பை ஜெயலலிதா துண்டித்தார். ஸ்டெர்லைட் ஆலையினுடைய உரிமத்தையும் ரத்துசெய்தார். அதை எதிர்த்து, அந்த நிர்வாகம் 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 31-ம் தேதி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்து அனுமதியை பெற்றது. 8.8.2013 அன்று தேசிய பசுமை தீர்ப்பாயம் சில நிபந்தனைகளை விதித்து அந்த ஆலையை துவக்கிக் கொள்ளலாம் என்று ஒரு தீர்ப்பை வழங்கியது.
ஆலைக்கு மின்சாரம் துண்டிப்பு
2013-ல் தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய அந்த தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்திலே முதல்வர் ஜெயலலிதா மேல்முறையீடு செய்தார். தற்போது வழக்கு நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 9-ம் தேதியன்று, ஆலையை தொடர்ந்து இயக்குவதற்காக அந்த நிர்வாகம் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் விண்ணப்பம் செய்தது. அரசு அதை நிராகரித்து விட்டது. மாசுகட்டுப்பாட்டு வாரியத்தினுடைய உத்தரவின்பேரில் தமிழக மின்சார வாரியம் ஆலைக்கு வழங்கக்கூடிய மின் இணைப்பை இன்று துண்டித்து விட்டது. ஆகவே, அரசு தொடர்ந்து மக்களுடைய உணர்வை மதித்து, மறைந்த முதல்வர் ஜெயலலிதா 2013-ல் இந்த ஆலை மூடுவதற்கு எத்தகைய பணிகளை மேற்கொண்டார்களோ, அந்த பணிகளை தற்போது அரசு தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகிறது.
அப்பாவி மக்களை தூண்டிவிட்டு...
தற்பொழுது வேண்டுமென்றே அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த சில எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களும், சில இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் அப்பாவி மக்களை தூண்டிவிட்டு, போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். அரசு கிட்டத்தட்ட4, 5 மாதமாக, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், போராட்டக்காரர்களை அழைத்து 14 முறை கூட்டம் நடத்தி அரசால் எடுத்த நடவடிக்கை பற்றி விளக்கமாக தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல், கடந்த ஏப்ரல் 14-ம் தேதி மாவட்ட கலெக்டர் அரசின் நிலைப்பாட்டை நாளிதழ்களில் மக்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென்பதற்காக விளம்பரம் செய்திருக்கின்றார். ஸ்டெர்லைட் ஆலை 2013-லிருந்து 2018 வரைக்கும் மாசுக்கட்டுப்பாடு வாரியத்தில் புதுப்பிப்பதற்காக விண்ணப்பம் செய்தது, அது ஏப்ரல் 9-ம் தேதி மாசுக்கட்டுப்பாடு வாரியத்தால் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் அனுமதியில்லாமல் ஆலையை இயக்க முடியாது.
சமூக விரோதிகள் ஊடுருவல்
இவை அத்தனையும் அந்தப் பகுதி மக்களுடைய உணர்வுகளை, அவர்களுடைய வேண்டுகோளை அரசால் சட்டத்திற்குட்பட்டு நிறைவேற்றப்பட்டு வந்திருக்கிறது. பொதுமக்கள் பலமுறை போராட்டம் நடத்தியிருக்கின்றார்கள். அப்படி நடத்துகின்ற பொழுதெல்லாம் அமைதி காத்து, அறவழியிலே போராட்டம் நடத்தினார். ஆனால், இந்த முறை சில எதிர்க்கட்சிகளின் துண்டுதலின் பேரில், சில சமூக விரோதிகள் ஊடுருவி, அப்பாவி ஜனங்களை பயன்படுத்தி அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையிலே இந்த போராட்டத்தை இன்றைக்கு ஒரு மோசமான சூழ்நிலைக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். இன்றைய தினம் உயிரிழந்த அத்தனைபேருக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல், மிகுந்த வேதனையும், துயரமும் நாங்கள் அடைந்துள்ளோம்.
மூடுவதற்கு நடவடிக்கை
ஏனென்று சொன்னால் அரசால் இவ்வளவு நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் என்ன, என்ன கோரிக்கை வைத்தார்களோ, அதையெல்லாம் அரசால், சட்டத்திற்குட்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்றைக்கும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், ஏப்ரல் 9-ம் தேதியன்று மாசுக்கட்டுப்பாடு வாரியம் அந்த ஆலை தொடர்ந்து செயல்படுவதற்கு அனுமதி வேண்டுமென்று விண்ணப்பித்ததையும் நிராகரித்துள்ளது. அதற்கும், அவர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அந்த வழக்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வழக்கில் அரசின்சார்பாக வழக்கறிஞர்கள் அரசின் கருத்தை எடுத்து வைத்து வாதிட்டார்கள். ஆகவே, அரசைப் பொறுத்தவரைக்கும் மக்களுடைய உணர்வுக்கு மதிப்பளிக்கின்ற அரசு. இந்த ஸ்டெர்லைட்ஆலையைப் பொறுத்தவரைக்கும் அதை மூடுவதற்குண்டான நடவடிக்கையைஅரசு சட்டத்தின் வாயிலாக இன்றைக்கு நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஆகவே, அன்றையதினம் நடைபெற்ற சம்பவம் ஒரு விரும்பத்தகாத சம்பவம். அங்கு 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கின்றது. அந்த தடை உத்தரவில், ஒருபொதுக்கூட்டமோ, ஆர்ப்பாட்டமோ, ஊர்வலமோ நடத்தக்கூடாது. ஆகவே, விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறக் கூடாது என்பதற்காகத்தான் இந்த 144 தடை உத்தரவே போடப்பட்டது. ஆனால், சில விஷமிகளும், சில அரசியல் கட்சித்தலைவர்களும் சுயநலத்திற்காக அப்பாவி மக்களை பயன்படுத்தி அத்தகைய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்று மிகவேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி18 hours 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 17 hours ago |
ரவா பர்பி1 week 19 hours ago |
-
ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: அண்ணாமலை
17 Apr 2024கோவை : ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
வைரலாகும் ரோகித் விடியோ
17 Apr 2024மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவின் விடியோ வைரலாகி வருகிறது.
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சி.ஏ.ஏ. ரத்து செய்யப்படும் : மம்தா பானர்ஜி வாக்குறுதி
17 Apr 2024புதுடெல்லி : இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வாக்களித்தால் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) ஆகியவற்றை ரத்து செய்வோம் என திரிணமூல் காங்க
-
நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
17 Apr 2024சென்னை : நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறை நீட்டிப்பு
17 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறையாக நீட்டிக்கப்பட்டள்ளது. வரும் 22ம் தேதி நேரில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
நிதானத்தை கடைபிடியுங்கள்: இஸ்ரேல் பிரதமரிடம் ரிஷி சுனக் வலியுறுத்தல்
17 Apr 2024லண்டன் : ஈரான் தாக்குதல் விவகாரத்தில் நிதானத்தை கடைபிடிக்குமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம், இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் தொலைபேசியில் வலியுறுத்தி உள்ளார்.
-
துப்பாக்கிச்சூடு சம்பவம்: சல்மான் கானை நேரில் சந்தித்து உறுதியளித்த முதல்வர் ஏக்நாத்
17 Apr 2024மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டு முன் துப்பாக்கிச்சூடு நிகழ்வு நடந்த நிலையில், அவரது வீட்டுக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நேரில் சென்று பாதுகாப
-
தமிழகத்தில் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் வரும் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கோவாவில் ரூ.1,400 கோடி மதிப்பில் சொத்து காட்டிய பா.ஜ. வேட்பாளர்
17 Apr 2024பனாஜி : கோவாவில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் பெண் ஒருவர், கணவருடன் சேர்ந்து ரூ,1,400 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளார்.
-
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பார்லி. தேர்தல் முடியும் வரை எக்ஸ் பதிவுகள் இடைநிறுத்தம்
17 Apr 2024சென்னை : தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள், தலைவர்கள் வெளியிட்ட 4 பதிவுகளை இடைநிறுத்தம் செய்வதாக எக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
சேலத்தில் இ.பி.எஸ். ரோடு ஷோ
17 Apr 2024சேலம் : சேலத்தில் அ.தி.மு.க. தலைவர் எட்ப்பாடி பழனிசாமி ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரித்தார்.
-
அரசியலை பணம் குவிக்கும் தொழிலாக மாற்றுகின்றனர் : பிரசாரத்தில் சீமான் வேதனை
17 Apr 2024சென்னை : 'அரசியலை பணம் குவிக்கும் ஒரு தொழிலாக மாற்றுகின்றனர்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
-
தமிழகத்தில் இதுவரை ரூ. 1,297 கோடி பணம், தங்கம் பறிமுதல்: சாகு தகவல்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி நடைபெற்ற சோதனையில் தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி பணம், தங்கம், பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை த
-
எல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்க இண்டியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் : கனிமொழி எம்.பி. வேண்டுகோள்
17 Apr 2024திருச்செந்தூர் : எல்லோருக்கும் சமமான கல்வியை தருவதற்காக இண்டியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று திருச்செந்தூரில் கனிமொழி எம்.பி.
-
கடந்த ஒரு மாதமாக அரசியல் கட்சியினர் தீவிர வாக்குசேகரிப்பு: தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது : 21 மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.
-
டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
17 Apr 2024ஜெய்பூர் : டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
31-வது லீக் ஆட்டம்...
-
கோவையில் தான் மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் : அமைச்சர் உதயநிதி பிரசாரம்
17 Apr 2024திருப்பூர் : கோவையில் தான் மத்திய பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
-
தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.400 கோடிக்கு மது விற்பனை
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ. 400 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்த நடிகை நமிதா
17 Apr 2024சென்னை : இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று நடிகை நமிதா வாக்கு சேகரித்தார்.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவை டிக்கெட் இன்று வெளியீடு
17 Apr 2024திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவைக்கான டிக்கெட்டுகள் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடுகிறது.
-
ஜாஸ் பட்லர் அதிரடி சதம்: ராஜஸ்தான் அணி வெற்றி
17 Apr 2024ஜெய்பூர் : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி வாகை சூடியது.
-
இதுவரை ரூ.1,297 கோடி மதிப்பில் ரொக்கம், தங்கம் பறிமுதல்: 44,800 வாக்குச்சாவடிகள் வெப் கேமிராக்கள் மூலம் கண்காணிப்பு : தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்
17 Apr 2024சென்னை : 'தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி மதிப்பிலான ரொக்கம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன' என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவி
-
இண்டியா கூட்டணிக்கு வாக்களிக்க ஜெய்பீம் பட இயக்குநர் வேண்டுகோள்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலில் இண்டியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு மக்களுக்கு ஜெய்பீம், வேட்டையன் பட இயக்குநர் த.செ.ஞானவேல் வேண்டுகோள் விடு
-
மியான்மர் சிறையில் இருந்து வீட்டு காவலுக்கு ஆங் சான் சூகி மாற்றம்
17 Apr 2024மியான்மர் : மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல போராட்டங்களை நடத்திய ஆங் சான் சூகி சிறையில் இருந்து வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மியான்மர் ராணுவம் தெரிவித்த
-
'நான் முதல்வன்' இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
17 Apr 2024சென்னை : ‘நான் முதல்வன்’ நம் இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.