முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தூத்துக்குடியில் கைது

வெள்ளிக்கிழமை, 25 மே 2018      தமிழகம்
Image Unavailable

தூத்துக்குடி: தூத்துக்குடியில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனை போலீசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தையடுத்து படுகாயமடைந்தோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை சந்திக்க தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் தூத்துக்குடி சென்றனர். ஆனால் விமான நிலையம் வந்திறங்கிய உடனேயே அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளதால் மருத்துவமனைக்கு செல்ல அனுமதி இல்லை தெரிவித்தனர். அத்துடன், தடையை மீறி செயல்பட்டதாக கூறி வேல்முருகன் மற்றும் அக்கட்சி நிர்வாகிகள் 10 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து