முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோலைமலை முருகன்கோவிலில் வசந்த உற்சவ திருவிழா.

வெள்ளிக்கிழமை, 25 மே 2018      மதுரை
Image Unavailable

  அழகர்கோவில்.  -மதுரை மாவட்டம் அழகர்மலை உச்சியில் உள்ளது ஆறாவது படை வீடு எனும்  சோலைமலைமுருகன் கோவில் ஆகும்.இக்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஒன்றானது வைகாசி மாத வசந்த உற்சவ திருவிழாவுஒன்றாகும்.இந்தவிழாகடந்த19ந்தேதிதொடங்கியது.இதில் காப்புகட்டுதல்,சண்முகார்ச்சனை,மஹாபிஷேகம்,சுவாமி புறப்பாடும் நடந்தது.தொடர்ந்து தினமும் இதைப்போலவே நிகழ்வுகள் நடந்துவருகிறது.மேலும் நேற்று  சுவாமிக்கு பால்,பழம்,பன்னீர்,பஞ்சாமிர்தம்,விபூதி,சந்தனம்,புஷ்பம்,உள்ளிட்ட 16.வகையான அபிஷேகங்கள் நடந்தது.தொடர்ந்து மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் பிரகாரங்கள் வழியாக சுவாமி புறப்பாடு நடந்தது.தினமும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.வருகிற 28ந் தேதி 10ம் நாள் திருவிழாவாக இந்த வசந்த உற்சவ திருவிழா நிறைவுபெறுகிறது.திருவிழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம்,நிர்வாக அதிகாரி மாரிமுத்து,மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்துவருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து