முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வட கொரிய அதிபரை சந்திக்க ஆக்கபூர்வ பேச்சு: டிரம்ப் தகவல்

சனிக்கிழமை, 26 மே 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்: வடகொரிய அதிபர் கிம்மை சந்திப்பது தொடர்பாக ஆக்கப்பூர்வமான பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்பும், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் வரும் ஜூன் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்துப் பேச திட்டமிடப்பட்டிருந்தது. இரு நாடுகளுக்கிடையே கருத்து வேறுபாடுகள் அதிகமானதைத் தொடர்ந்து இந்தச் சந்திப்பை அதிபர் டிரம்ப் திடீரென ரத்து செய்வதாக தெரிவித்தார்.

இதன் காரணமாக இரு நாடுகளுக்க்கு இடையே அணுஆயுத சோதனை தொடர்பாக மீண்டும் மோதல் ஏற்படும் சூழல் உருவானது. இந்த நிலையில் தங்கள் நாட்டிலிருந்து அனு ஆயுத சோதனை கூடத்தை தகர்க்கும் வீடியோவை வடகொரியா வெளியிட்டது. மேலும், வடகொரிய அரசு ஊடகத்தில் அந்த நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்காவுடன் எப்போது வேண்டுமானாலும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம் என்று தெரிவித்தார்.

வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நட்பு பாலமாக விளங்கும் தென்கொரிய அதிபர் மூன் ஜே உன் நடத்திய உயர்நிலை ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

இந்த நிலையில் இது குறித்து டிரம்ப், வடகொரியாவுடன் தொடர்ந்து ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. இது தொடர்ந்தால் ஏற்கெனவே முடிவுச் செய்யப்பட்ட ஜூன் 12-ம் தேதி சந்திப்பு நடைபெறும். அவர்கள் சந்திப்பை விரும்புகிறார்கள் என்று தெரிவித்துள்ளார். அமெரிக்கா - வடகொரியா இடையே மீண்டும் சுமூக போக்கு நிலவுவதால் டிரம்ப் - கிம் சந்திப்பு திட்டமிட்டப்படி வரும் ஜூன் 12-ம் தேதி நடைபெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து