முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4 ஆண்டு பா.ஜ.க. ஆட்சியில் நாட்டின் வளர்ச்சி பேரியக்கமாக மாறியுள்ளது பிரதமர் மோடி பெருமிதம்

சனிக்கிழமை, 26 மே 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி: பா.ஜ.க.வின் 4 ஆண்டுகள் ஆட்சியில் நாட்டின் வளர்ச்சி என்பது பேரியக்கமாக மாறியுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

மத்தியில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைந்து, 5-ம் ஆண்டு தொடங்குகிறது. கடந்த 2014-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் அமோகமாக வெற்றி பெற்ற மோடி, மே 26-ம் தேதி பிரதமராகப் பொறுப்பேற்றார். அவர் பிரதமர் பதவிக்கு வந்து நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைந்தது. இது குறித்து டுவிட்டரில் மக்களுக்கு வாழ்த்துக்களும், நன்றியும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, 2014, மே 26 இந்த நாளில்தான் நாங்கள் தேசத்தை மாற்றத்துக்கு உள்ளாக்க வேண்டும் என்ற நோக்கில் எங்கள் பயணத்தை தொடங்கினோம். கடந்த 4 ஆண்டுகளாக, தேசத்தில் வளர்ச்சி என்பது மிகப்பெரிய இயக்கமாக மாறி இருக்கிறது.  125 கோடி மக்களும் நாட்டை வளர்ச்சியின் மிகப்பெரிய உயரத்துக்குக் கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மக்களின் ஆதரவும், அரவணைப்பும் ஒட்டுமொத்த அரசுக்கும் மிகப்பெரிய ஊக்கமாகவும், வலிமையாகவும் அமையும்.

எங்களுக்கு இப்போது இருக்கும் இதே அர்ப்பணிப்பு உணர்வோடும், துடிப்போடும், உத்வேகத்தோடும் தேசத்தின் மக்களுக்காகத் தொடர்ந்து உழைப்போம். புதிய இந்தியாவைக் கட்டமைப்பதற்காக மக்களுக்கு ஆதரவான முடிவுகளையும், நேர்மையுடன் சிறப்பாக செயல்பட இருக்கிறோம். இவ்வாறு பிரதமர் மோடி அதில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து