முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை வந்திறங்கிய சி.எஸ்.கே வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு

திங்கட்கிழமை, 28 மே 2018      விளையாட்டு
Image Unavailable

சென்னை : நாடு முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐ.பி.எல் கிரிக்கெட் இறுதி ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. பரிசளிப்பு விழாவில், வெற்றியோ தோல்வியோ  சென்னை செல்வதாக முடிவெடுத்தோம். ரசிகர்களைச் சந்திக்கவுள்ளோம் என்று டோனி தெரிவித்திருந்தார். இதனால் டோனி மற்றும் சி.எஸ்.கே ரசிகர்களை நேரில் காண ரசிகர்கள் சென்னை விமான நிலையத்தில் திரண்டிருந்தனர்.

நேற்று முன்தினம் மாலை சி.எஸ்.கே அணியினர் விமானம் மூலமாக மும்பையிலிருந்து சென்னைக்கு வந்திறங்கினர். அங்கு, சி.எஸ்.கே வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தோனி மற்றும் சி.எஸ்.கே வீரர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காகப் பழைய விமான நிலையத்துக்கு வீரர்கள் அழைத்து வரப்பட்டார்கள். பிறகு, அங்கிருந்து நட்சத்திர விடுதிக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து