முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாம்பன் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு எண் -1 ஏற்றம்.

செவ்வாய்க்கிழமை, 29 மே 2018      ராமநாதபுரம்
Image Unavailable

 ராமேசுவரம்,- பாம்பன், ராமேசுவரம்,கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வருவதால் பாம்பன் துறைமுக அலுவலகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு 1 ஆம் எண் நேற்று ஏற்றப்பட்டது.
 .வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.   இதைத் தொடர்ந்து பாக்ஜலசந்தி,மன்னார் வளைகுடா கடலோரப் பகுதிகளான பாம்பன், ராமேசுவரம்,கடல் பகுதியில் பலத்த சூறைக் காற்று வீசி வருகிறது. இந்த காற்று வேகம் அதிகரித்து புயலாக  மாற வாய்ப்பு உள்ளது.ஆதலால்  பாம்பன், ராமேசுவரம்,கடல் பகுதியில்   முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக. பாம்பன் துறைமுக அலுவலகத்தில் நேற்று  மாலை புயல் எச்சரிக்கை கூண்டு எண் 1  ஏற்றப்பட்டது.இதை தொடர்ந்து அப்பகுதிகளில் நாட்டு படகு மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும், மேலும்   கடலோரப்பகுதியில் வசிக்கும் மீனவர்கள் பாதுகாப்பாக இருக்க பாம்பன் துறைமுக அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து