எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை: அ.தி.மு.க. ஆட்சியின் வளர்ச்சியையும் வேகத்தை கண்டு பொறாமையால் எதிர்க்கட்சியில் போட்டி சட்டசபை நடத்துகிறார்கள் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொன்ன குட்டிக்கதை சொல்லி அமைச்சர் ஜெயகுமார் விளக்கினார்.
இதுகுறித்து தமிழக சட்டசபையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் சொன்ன குட்டிக்கதை வருமாறு:-
மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த 12.02.2003 அன்று இதே அவையிலே, எதிர்க்கட்சிகள், குறிப்பாக அன்றைக்கு எந்தளவிற்கு அரசையெல்லாம் விமர்சனம் செய்ததையெல்லாம் குறித்து அண்ணா வாழ்க்கையிலிருந்து அவர் சொன்ன நிகழ்ச்சி, இந்த அவையிலே சொல்லியிருக்கின்றார்கள். அதை நான் இப்பொழுது சொல்கிறேன். அன்று ஜெயலலிதா சொன்னது, நம் மீது சிலர் ஆத்திரத்தை காட்டுகிறார்கள், கொட்டுகிறார்கள். சட்டசபையிலும் சரி, வெளியிலும் சரி, நம்மைக் கண்டால் அப்படி அவர்களுக்கு ஆத்திரம் வருவானேன்? யோசித்துப் பார்த்தேன், விளங்கவில்லை.
அண்ணா வாழ்க்கையில் நடைபெற்ற நிகழ்ச்சி எனக்கு இன்றைக்கு இந்தக் கேள்விக்கு விடையைத் தந்தது அண்ணா திருச்சியிலிருந்து ஈரோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார். வழியிலே ஓர் ஊரில் அரசியல் கூட்டம் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. யாரோ ஒரு அரசியல்வாதி, அண்ணாவை திட்டிக் கொண்டிருந்தார். அண்ணாவுடன் காரில் சென்று கொண்டிருந்த நண்பர் ஒருவர் அண்ணா நீங்கள் இந்த அரசியல் வாதியைப் பற்றி எதுவும் திட்டிப் பேசியதில்லையே, இவர் ஏன் உங்களைப் பற்றி இப்படி தாறுமாறாகப் பேசவேண்டும். இவ்வாறு அந்த நண்பர் கேட்டதற்கு, அண்ணா எந்த பதிலும் சொல்லவில்லை.
கொஞ்சதூரம் பயணம் தொடர்ந்தது. முன்னால் ஒரு மாட்டு வண்டி சென்று கொண்டிருந்தது. அண்ணாவின் கார் அந்த மாட்டு வண்டியை முந்திச்சென்றது. அப்படி முந்திச் செல்லும்போது, வண்டிக்காரன் சத்தம் போட்டான். காரில் போகிறவர்களை திட்டினான். அப்பொழுது அண்ணா, முன்னால் கேள்வி கேட்ட நண்பரிடம் சொன்னார். இந்த வண்டிக்காரன் ஏன் நம்மைத் திட்டினான்? நமது ஓட்டுநர் தவறு செய்தாரா? நாம்தான் ஏதாவது கேலியாக பேசினோமா? என்று அண்ணா கேட்டார். நண்பர்சொன்னார், இல்லையே, அண்ணா, நாம் ஒன்றும் தவறு செய்யவில்லையே. நம் ஓட்டுநரும் முறையாகத்தான் வண்டியை ஓட்டி வந்தார். அப்புறம் ஏன் அந்த வண்டிக்காரன் நம்மைத்திட்டினான் என்பதுதான் விளங்கவில்லை என்று நண்பர் சொன்னதற்கு, அண்ணா பதில்சொன்னாராம். நாம் வண்டியைத் தாண்டி வந்துவிட்டோம், நமது வேகத்திற்கு ஈடுகொடுக்க இயலாமையால், வண்டிக்காரன் நம்மைத் திட்டினான். அப்படித்தான், நமது வளர்ச்சியின் வேகத்திற்கு ஈடுகொடுத்து வரஇயலாமல் பின்தங்கி விட்டவர்கள், பொறாமையால் நம்மை திட்டி பேசுகிறார்கள் என்று அண்ணா சொன்னார்.
இன்றைக்கு நம் மீது சிலருக்கு ஆத்திரம். ஏன் இந்த ஆத்திரம் என்றால், அண்ணா அன்று சொன்ன பதிலைத் தான் நான் இன்று சொல்ல வேண்டியிருக்கிறது. நமது வளர்ச்சியை தாங்க முடியாதவர்கள், நமது புகழைக் கண்டு பொறாமைப்படுபவர்கள், அவர்களைத்தாண்டி நாம் வளர்ந்துவிட்டோம் என்ற ஆத்திரத்தில் கண்டபடி பேசுகிறார்கள். அவர்களுடைய ஒவ்வொரு வார்த்தையும் அவர்களுடைய தோல்வியின் வெளிப்பாடாகவே வந்து கொண்டிருப்பதை இந்த நாட்டு மக்கள் நன்றாகவே அறிவார்கள். அரசின் மீது எந்தக் குற்றமும், குறையும் சொல்லாத, எந்தவித பொருளும் இல்லாததால், மக்கள் கவனத்தை ஏதேனும் ஒரு வழியில் ஈர்க்க வேண்டுமென்று வெளிநடப்பு செய்து, மாதிரி சட்டசபை, அது, இது என்று பொழுதைப் போக்கிக்கொள்வதிலேயே காலத்தை கழிப்பவர்களை நிச்சயமாக தொகுதி மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள். இவ்வாறு அமைச்சர் ஜெயகுமார் குட்டிக்கதை மூலம் எதிர்க்கட்சிகளை சாடினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 17 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.