முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமூக விரோதிகள் என மக்களை ரஜினிகாந்த் கூறவில்லை: தமிழிசை

வெள்ளிக்கிழமை, 1 ஜூன் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை, சமூக விரோதிகள் என ரஜினிகாந்த் மக்களை கூறவில்லை என்று தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த சம்பவத்தில் 13 பேர் பலியாயினர். ஏராளமானவர்கள் காயம் அடைந்து அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை  நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் ரஜினிகாந்த் நிருபர்களிடம் கூறுகையில், போராட்டத்தின்போது ஏற்பட்ட கலவரத்துக்கு சமூக விரோதிகளே காரணம் என்று கூறினார். அவரது இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்களை சமூக விரோதிகள் என்று கூறியதாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் நடிகர் ரஜினிகாந்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், சமூக விரோதிகள் என மக்களை ரஜினிகாந்த் கூறவில்லை என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்து உள்ளார். இது குறித்து தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது,

சமூக விரோதிகள் என மக்களை ரஜினிகாந்த் கூறவில்லை. தூத்துக்குடியில் தீவைப்பு உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டது சமூக விரோதிகள்தான். தி.மு.க., காங்கிரஸ், வி.சி.க, இடதுசாரிகள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருவது தவறு என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து