முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடகத்தில் மந்திரி பதவிகள் யார், யாருக்கு? இன்னும் முடிவாகவில்லை என்கிறார் குமாரசாமி

ஞாயிற்றுக்கிழமை, 3 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

பெங்களூர் : அமைச்சர்களாக யாருக்கு வாய்ப்பளிப்பது என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால், காங்கிரஸ், ம.ஜ.த. இரு கட்சிகளுக்கும் இடையே துறைகள் பங்கிடப்பட்டுள்ளன. அமைச்சரவை விரிவாக்கத்துக்கு பிறகே துறைகள் ஒதுக்கப்படும் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்தார்.

இது குறித்து பெங்களூரு, விதான்சவுதாவில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,

மாநிலத்தில் ம.ஜ.த. - காங்கிரஸ் கூட்டணி அரசு பதவியேற்றுள்ளதால், 2018-19-ம் ஆண்டுக்கான புதிய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். இதுகுறித்து அரசு உயரதிகாரிகளுடன் 3 அல்லது 4 நாள்களில் ஆலோசிக்க திட்டமிட்டிருக்கிறேன். அமைச்சரவை விரிவாக்கத்துக்கு பிறகு, அரசின் செயல் திட்டங்கள் குறித்தும், சட்டசபை கூட்டுக் கூட்டம் குறித்தும் முடிவெடுக்கப்படும். ஜூலை 31-ம் தேதியுடன் முந்தைய காங்கிரஸ் அரசின் பட்ஜெட் முடிவுக்கு வருகிறது. முந்தைய காங்கிரஸ் அரசின் மக்கள் நலத் திட்டங்களைத் தொடர்வதோடு, கூட்டணி அரசின் புதிய திட்டங்களையும் புதிய நிதிநிலை அறிக்கையில் அறிவிப்போம்.

துறைகள் பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் சிறந்த பட்டியலை தயாரித்திருந்தனர். அதற்கு ம.ஜ.த ஒப்புதல் அளித்துள்ளது. துறைகள் பங்கீடு தொடர்பாக இரு கட்சிகளிடையே எவ்வித மோதலும் இல்லை. ஊடகங்கள் தான் கற்பனையான செய்திகளை வெளியிட்டு குழப்பத்தை உருவாக்க முயற்சிக்கின்றன. அமைச்சர்களாக யாருக்கு வாய்ப்பளிப்பது என்பதை இன்னும் முடிவுசெய்யவில்லை. ஆனால், இரு கட்சிகளுக்கும் இடையே துறைகள் பங்கிடப்பட்டுள்ளன. அமைச்சரவை விரிவாக்கத்துக்கு பிறகே துறைகள் ஒதுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து