முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ம.பி. துப்பாக்கி சூடு சம்பவ நினைவு தின போராட்டத்தில் பங்கேற்க ராகுல் முடிவு

ஞாயிற்றுக்கிழமை, 3 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : மத்தியப் பிரதேச மாநிலம், மந்த்சௌரில் போலீசார் கடந்த ஆண்டு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலியான சம்பவத்தின் ஓராண்டு நினைவு தினத்தையொட்டி நடத்தப்பட இருக்கும் போராட்டத்தில் கலந்து கொள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் முடிவு செய்துள்ளார்.

இது குறித்து சுட்டுரையில் ராகுல் காந்தி வெளியிட்டிருக்கும் பதிவில்,  நாள்தோறும் விவசாயிகள் 35 பேர் தற்கொலை செய்து வருகின்றனர்; இதனால் விவசாய பிரச்னைக்கு தீர்வு காண்பதில் மத்திய அரசு தோல்வியடைந்து விட்டதற்கு எதிராக 10 நாள் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். நீதி கோரி விவசாயிகள் நடத்தும் போராட்டத்துக்கு காங்கிரஸ் ஆதரவாக இருப்பதுடன், மந்த்சௌரில் வரும் 6-ம் தேதி விவசாயிகள் நடத்தும் போராட்டத்திலும் கலந்து கொண்டு உரை நிகழ்த்த உள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து