முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா, பாக். இடையே மீண்டும் ராணுவ பேச்சுவார்த்தை நடத்த காஷ்மீர் முதல்வர் கோரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 3 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

ஜம்மு : இந்தியா, பாகிஸ்தான் இடையே மீண்டும் ராணுவ பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும் என்று காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜம்மூ மாவட்டம் அக்னூர் பகுதியிலான இருநாட்டு எல்லையில் நேற்று பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய எல்லை காவல் படையினர் 2 பேர் உயிரிழந்தனர்.
அண்மையில் இருநாட்டு ராணுவமும் 2013 போர் நிறுத்த ஒப்பந்தத்தை கடைபிடிப்பதாக பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், தற்போது பாகிஸ்தான் ராணுவத்தினர் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது எல்லையோரத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.  இது குறித்து கருத்து தெரிவித்த அம்மாநில முதல்வர் மெகபூபா முப்தி கூறுகையில்,

இரண்டு நாட்டு ராணுவ அதிகாரிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியும் தற்போது நிகழ்ந்துள்ள இந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது. அவர்கள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இந்த கொலைகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து