முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜார்ஜ் பெர்னாண்டஸ் போன்ற போராட்ட குணமுடைய தலைவர்கள் தேவை எல்.கே. அத்வானி விருப்பம்

திங்கட்கிழமை, 4 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் போன்ற போராட்ட குணமுடைய தலைவர்கள், நாட்டுக்கு தேவைப்படுவதாக பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி புகழ்ந்து பேசியுள்ளார்.

முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சரான ஜார்ஜ் பெர்னாண்டஸ் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் உள்ள வீட்டில் சிகிச்சை பெற்று வரும் அவர், தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கிறார். இந்நிலையில் ஜார்ஜ் பெர்னாண்டஸின் 88-வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, டெல்லியில் உள்ள ஜார்ஜ் பெர்னாண்டஸ் இல்லத்துக்கு சென்று அவருக்கு அத்வானி வாழ்த்து தெரிவித்தார். பின்னர் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்திய அரசியலில் ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஆற்றிய பங்களிப்பை விளக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய இணையதளத்தை அத்வானி தொடங்கி வைத்தார். இதையடுத்து அவர் பேசியதாவது,

நாடாளுமன்றத்தில் ஜார்ஜ் பெர்னாண்டசுடன் இணைந்து பல ஆண்டுகள் பணிபுரிந்துள்ளேன். அவர் முக்கியமான நபர் ஆவார். போராட்ட குணமுடைய தலைவர்கள், நாட்டுக்கு எப்போதும் தேவைப்படுகிறார்கள். அவர்கள் இல்லாமல் எதுவும் நடக்காது. ஒரு நாட்டில் போராளிகள் இல்லாதபட்சத்தில், சுதந்திரத்தின் பயன் நாட்டுக்கு கிடைக்காது. ஜார்ஜ் பெர்னாண்டஸ் போன்ற போராட்ட குணமுடைய தலைவர்கள் வர வேண்டும். அப்போதுதான் நாடு வளர்ச்சியடையும் என்று அத்வானி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து