முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரு பிளேட் பிரியாணி ரூ.190: கோபத்தில் ஓட்டல் ஓனர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை

செவ்வாய்க்கிழமை, 5 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு பிளேட் பிரியாணியை ரூ.190-க்கு விற்ற ஓட்டல்காரரை கஸ்டமர் ஒருவரே சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தின் நார்த் 24 பர்கனாஸ் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சுட்டுக் கொல்லப்பட்டவர் பெயர் சஞ்சய் மண்டல் என்று தெரியவந்துள்ளது. ஒரு பிளேட் பிரியாணியை ரூ.190 என்ற விலையில் விற்பனை செய்து வந்துள்ளார் சஞ்சய் மண்டல். 4 நண்பர்கள் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு விட்டு பிரியாணிக்கு பணம் கொடுக்க சென்றுள்ளனர். அப்போது இந்த விலை ரொம்பவே அதிகம் என்று சஞ்சய் மண்டலுடன் அந்த நண்பர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கை கலப்பு ஏற்படும் சூழல் உருவானது. அப்போது, நண்பர் கூட்டத்தில் ஒருவர் தன்னிடமிருந்த கைத் துப்பாக்கியால் திடீரென சஞ்சய் மண்டலை நோக்கி சுட்டுள்ளார். இதையடுத்து நால்வரும் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். அங்கிருந்தவர்கள் உடனடியாக சஞ்சய் மண்டலை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் சஞ்சய் மண்டல் பரிதாபமாக பலியானார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

சஞ்சய் மண்டல் சகோதரர், போலீசாரிடம் முகமது பைரோஸ் என்பவர்தான் துப்பாக்கியால் சுட்டது என்று அடையாளம் காட்டியுள்ளார். இதையடுத்து முகமது பைரோஸை போலீசார் கைது செய்துள்ளனர். அவருடன் அன்று பிரியாணி சாப்பிட்டு தகராறு செய்த பிற நண்பர்கள் தலைமறைவாகியுள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து