எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம்,- பிளாஸ்டிக் பயன்பாட்டினை நூறுசதவீதம் தவிர்க்க வேண்டும் என்று உலக சுற்றுச்சூழல்த pனத்தில் ராமநாதபுரம் கலெக்டர் முனைவர்நடராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம், அரியமான் கடற்கரை பகுதிகளில் சுற்றுச்சூழல் மேம்பாடு குறித்த பல்வேறு விழிப்புணர்வு பணிகளை கலெக்டர் முனைவர் நடராஜன் துவக்கி வைத்து பங்கேற்றார். உலகளவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்திடவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையிலும் 1972ஆம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் ஜூன் 5-ஆம் நாள் உலக சுற்றுச்சூழல் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாதலங்களான அரியமான் கடற்கரையில் தமிழ்நாடு வனத்துறையின் சார்பாகவும், ராமேஸ்வரம் விவேகானந்தா வித்யாலயா சார்பாகவும், ஹேண்ட் இன் ஹேண்ட் என்ற தொண்டு நிறுவனம் சார்பாகவும் சுற்றுச்சூழல் மேம்பாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிகளில் கலெக்டர் முனைவர் நடராஜன் தலைமையேற்று, விழிப்புணர்வு பணிகளைத் துவக்கி பள்ளி மாணவ, மாணவியர்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். முதலாவதாக தமிழ்நாடு வனத்துறையின் சார்;பாக அரியமான் கடற்கரைப் பகுதிகளில் பெருங்கன்று நடும் திட்டத்தினை துவக்கி வைத்து, அதிகளவில் மரக்கன்றுகள் நடுவதற்கான பணிகளை மரக்கன்று நட்டு வைத்து துவக்கி வைத்தார். மேலும் பிளாஸ்டிக் பயன்பாட்டினை முற்றிலுமாக தவிர்த்திட வேண்டும் என்பதை வலியுறுத்திடும் வகையில் அரியமான் கடற்கரை பகுதியில் சுற்றுப்புற தூய்மைப்படுத்தும் பணிகளை துவக்கி வைத்து, பள்ளி மாணவ, மாணவியர்களை ஒன்றிணைத்து கடற்கரையில் சுற்றுப்புற தூய்மைப்படுத்தும் பணிகளை மேற்கொண்டார்.
அதன் தொடர்ச்சியாக ராமேஸ்வரத்தில் உள்ள விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் ஹேண்ட் இன் ஹேண்ட் தொண்டு நிறுவனம் சார்பாக நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் விழாவில் மாணவ மாணவியர்களிடத்தில் உரையாற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் இந்நிகழ்ச்சியில், கடைகளுக்கு செல்லும் போதும், அத்தியாவசிய பொருட்கள், உணவுப் பண்டங்கள் ஆகியவற்றை வாங்கிடும் போதும் பிளாஸ்டிக் பைகளைத் தவிர்த்து துணிப் பைகளை பயன்படுத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி மாணவ, மாணவியர்களுக்கு துணிப் பைகளை வழங்கினார். அதேபோல அதிகளவில் மரக்கன்றுகளை நடுவதற்கு மாணவ, மாணவியர்களை ஊக்கப்படுத்திடும் விதமாக மரக்கன்றுகளையும் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:- மாவட்டத்தில் சுற்றுச்சூழலை மேம்படுத்திடும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2017-2018ஆம் ஆண்டில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பாக சாலையோரங்களில் நிழல் தரும் மரங்களை நடும் திட்டத்தின் கீழ் 40,0000 மரக்கன்றுகளும், அரசு நிலங்கள் மற்றம் தனியார் வசம் விலையில்லாமல் மரக்கன்றுகள் வழங்கி பராமரிக்கப்படுமு; வீதத்தில் மொத்தம் 2,56,000 மரக்கன்றுகளும் நடப்பட்டுள்ளன. அதேபோல வனத்துறையின் மூலம் பெருங்கன்று மரம் நடும் திட்டத்தின் கீழ் 16,200 மரக்கன்றுகளும், தனியார் வசம் விலையில்லாமல் மரக்கன்றுகள் வழங்கப்பட்டு பராமரிக்கப்படும் வீதத்தில் 35,000 மரக்கன்றுகளும், 25,0000 பனைமர விதைகளும் நடவு செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இராமேஸ்வரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு சுற்றுலா தளங்களை கண்டு மகிழ ஆண்டுதோறும் ஏறத்தாழ இரண்டு கோடி சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அதனடிப்படையில் இத்தகைய சுற்றுலா தளங்களில் சுற்றுச்சூழல் மேம்பாடு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திடும் விதமாக இன்றைய தினம் இந்நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது. அதேபோல இராமேஸ்வரத்தினை மிகச் சிறந்த சுற்றுலா தளமாக உருவாக்கிடும் வகையில் ஒளி ஒலி காட்சிகள் அமைத்தல், ராமாயண சுற்றுத்தொடர் பணிகள் என ரூ.30.93 கோடி மதிப்பில் பல்வேறு சுற்றுலா மேம்பாட்டு பணிகள் செயல்படுத்திட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ், தமிழ்நாடு முதலமைச்சர் பிளாஸ்டிக் இல்லாத தமிழ்நாடு என்ற உயரிய நோக்கத்தில் ஜனவரி 2019 முதல் பால், தயிர், எண்ணெய், மருத்துவ பொருட்களுக்கான உறைகள் தவிர தடிமன் வேறுபாடின்றி இதர மக்காத பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து அறிவித்துள்ளார்கள். அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நூறு சதவீதம் பிளாஸ்டிக் பயன்பாட்டினை ஒழித்திடும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் சுற்றுப்புறத்தினை மேம்படுத்திடும் வகையில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினைத் தவிர்த்து அதிகளவில் மரக்கன்றுகளை நட்டு பராமரித்திட வேண்டும். இவ்வாறு பேசினார். நிகழ்ச்;சியில்; மாவட்ட வனஉயிரின பாதுகாவலர் டி.கே.அசோக்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை, வனத்துறை ரேஞ்சர்கள் ஞானப்பழம், நவீன்குமார், ரகுவரன், சிக்கந்தர் பாட்ஷா உள்பட அரசு அலுவலர்கள், ஹேண்ட் இன் ஹேண்ட் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள், பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 6 hours ago |
பெப்பர் சிக்கன்6 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
ஈரோட்டிலிருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்
28 Mar 2024சென்னை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் இன்று பரப்புரையைத் தொடங்க உள்ளார்.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
சொன்னதை செய்த கம்மின்ஸ்
28 Mar 2024மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள் அடித்து வரலாற்று சாதனைப் படைத்தனர் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியினர்.
-
மும்பை - ஐதராபாத் மோதிய ஒரே போட்டியில் பல சாதனைகள்
28 Mar 2024ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு டி20 போட்டிகளில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
-
எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல: வைகோ
28 Mar 2024ஈரோடு, எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
-
பார்லி. தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
28 Mar 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட தன்னிடம் பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-03-2024.
29 Mar 2024 -
ரஷ்யாவை பாதுகாக்கவே உக்ரைனுடன் போர்: புடின்
29 Mar 2024மாஸ்கோ : நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் எல்லையை நோக்கி ரஷ்யா நகரவில்லை. மாறாக, அவர்கள் தான் நம்மை நெருங்கி வருகிறார்கள்.
-
இன்னும் ஒரு மாதம்தான் நரேந்திர மோடி பிரதமர் பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி பேச்சு
29 Mar 2024சென்னை : இன்னும் ஒரு மாதம்தான் நரேந்திர மோடி பிரதமர்.
-
நடுவானில் விமான என்ஜினில் கோளாறு: குடும்பத்துடன் உயிர்தப்பிய ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ
29 Mar 2024மாட்ரிட், நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமான என்ஜின் செயலிழந்ததை தொடர்ந்து ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், தனது குடும்பத்துடன் உயிர்தப்பினார்.
-
நம் வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.வுக்கு ஓட்டுப்போட கூடாது : தென்காசியில் சீமான் பிரச்சாரம்
29 Mar 2024தென்காசி : நம்முடைய வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.விற்கு நமது வாக்கை செலுத்தக்கூடாது என்று தென்காசியில் நடந்த பிரச்சாரத்தின்போது சீமான் பேசினார்.
-
இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று நம்புகிறோம் : ஐ.நா. செய்தி தொடர்பாளர் கருத்து
29 Mar 2024நியூயார்க் : இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என நம்புவதாக ஐ.நா. சபை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
-
மத்திய, மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை : கோவையில் பிரேமலதா குற்றச்சாட்டு
29 Mar 2024கோவை : மத்திய, மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கோவையில் நேற்று நடந்த பிரச்சாரத்தில் தே.மு.தி.க.
-
ஏப். 2 மற்றும் 4-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
29 Mar 2024சென்னை, ஏப்ரல் 2 மற்றும் 4-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தலில் போட்டி அ.தி.மு.க., தி.மு.க. இடையேதான் : கோவையில் கனிமொழி பிரச்சாரம்
29 Mar 2024கோவை : போட்டி அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் தான். பா.ஜ.க. பாவம். நானும் இருக்கேன் நானும், இருக்கேன் என்று சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதுதான் என தி.மு.க.
-
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் பிரம்மோற்சவ விழா ஏப். 5-ல் துவக்கம்
29 Mar 2024திருமலை, திருப்பதி கோதண்டராமர் கோவிலில் ஏப்ரல் 5-ம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
-
சென்னையில் தேர்தல் பணி பயிற்சிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ்
29 Mar 2024சென்னை, சென்னையில் தேர்தல் பணி பயிற்சிக்கு வராத 1,500 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
-
குன்றத்து முருகன் கோவிலில் நடந்த பங்குனி பெருவிழா தேரோட்டம் : அரோகரா கோஷத்துடன் வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்
29 Mar 2024மதுரை : திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நேற்று பங்குனி பெருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
-
ஆர்.ஜே.டி. 26, காங்கிரஸ் 9, இடதுசாரிக்கு 5 இடங்கள்: பீகாரில் இண்டியா கூட்டணி தொகுதிப் பங்கீடு நிறைவு
29 Mar 2024பாட்னா, பீகார் மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுக்கான இண்டியா கூட்டணியின் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது.
-
ரூ.1,800 கோடி அபராதம் செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ்: வருமானவரித்துறை அனுப்பியது
29 Mar 2024புது டெல்லி, 1993-94-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு கால கட்டத்துக்கான வரி மற்றும் அபராதமாக ரூ.
-
அனைத்து அரசு பணிகளிலும் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும்: ராகுல் காந்தி டுவிட்டரில் வாக்குறுதி
29 Mar 2024புது டெல்லி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அனைத்து அரசு பணிகளிலும் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்
-
தேர்தல் விதிமீறல் புகார்: நீலகிரியில் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு
29 Mar 2024நீலகிரி, பா.ஜ.க. வேட்பாளர் எல்.முருகன் மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
பிரதமர் மோடியுடன் பில்கேட்ஸ் சந்திப்பு: ஏ.ஐ. தொழில்நுட்பம் குறித்து ஆலோசனை
29 Mar 2024புது டெல்லி, டெல்லியில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் துணை நிறுவனர் பில் கேட்ஸ் நேற்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினார்.