முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சிப் திட்டப் பணிகள் மதுரை ஆணையாளர் அனீஷ் சேகர் ஆய்வு

வியாழக்கிழமை, 7 ஜூன் 2018      மதுரை
Image Unavailable

மதுரை -மதுரை மாநகராட்சி மண்டலம்; எண்.3 க்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆணையாளர்     மரு.அனீஷ் சேகர், இ.ஆ.ப. அவர்கள் இன்று (06.06.2018) ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.3 வார்டு எண்.68 புதுமகாளிப்பட்டி ரோட்டில் உள்ள திரௌபதியம்மன் 2 மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடத்தையும், வார்டு எண்.58 சிந்தாமணியில் ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடத்தையும், வார்டு எண்.71 சி.எம்.ஆர். ரோட்டில் அம்ரூட் திட்டத்தின் கீழ் ரூ.49 லட்சம் மதிப்பீட்டில் காமராஜபுரம் ஜோசப் பூங்காவில் நடைபெற்று வரும் பணிகளையும் என மொத்தம் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது  செயற்பொறியாளர் திரு.சந்திர சேகர், மக்கள் தொடர்பு அலுவலர் திரு.சித்திரவேல், உதவி செயற் பொறியாளர்கள் திரு.ஷர்புதீன், திருமதி. இந்திராதேவி, உதவிப் பொறியாளர்கள் திரு.காமராஜ், திரு.கந்தப்பர், திரு.ஜாகீh உசேன், சுகாதார ஆய்வாளர்கள்; திரு.வெங்கடசாமி, திரு.ஓம்சக்தி, திரு.முருகன், சுகாதார அலுவலர் திரு.நாகராஜ் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து