முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமேசுவரத்தில் தங்கும் விடுதியில் கணவன்,மனைவி மதுவில் விஷம் குடித்து சாவு.

வியாழக்கிழமை, 7 ஜூன் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

   ராமேசுவரம்,-:   ராமேசுவரத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில்  ஈரோட்டைச் சேர்ந்த கணவன் மனைவி இருவரும் மதுவில் விஷம் கலந்த  குடித்து நேற்று தற்கொலை செய்து கொண்டனர்.
ஈரோடு மாவட்டம் பெரியதாசம்பூர் கிராமம் எஸ்.எஸ்.டி நகரைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் சரவணன் (36). இவரது இரண்டாவது மனைவி காளீஸ்வரி(30) இவர்கள் இருவரும் நேற்று நள்ளிரவு பேருநேது மூலம் ராமேசுவரம் வந்துள்ளனர். பின்னர் ராமேசுவரம் பகுதியிலுள்ள வீரபத்திரசுவாமி கோயில் தெருவில் உள்ள தனியார் தங்கும் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.இந்நிலையில் காலையில் நீண்ட நேரமாகியும் இவர்கள் தங்கியிருந்த அறையின் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த விடுதியின் மேலாளர்  இது குறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். இதையடுத்து, ராமேசுவரம் டிஎஸ்பி., மகேஷ் தலைமையில் அங்கு வந்த நகர் காவல் நிலைய போலீஸார் சரவணன் தங்கியிருந்த அறையின் கதவை உடைத்துப் பார்த்தபோது, அங்கு இருவரும் மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர். இதையடுத்து, அவர்களை  போலீஸார்கள் சோதணை நடத்தி பார்த்தபோது, அவர்கள் இருவரும் உயிரிழந்துவிட்டது தெரியவந்தது.  இதனையடுத்து செல் போன் மூலம் தொடர்பு கொண்டு சரவணன் மைத்துனர் மணிமாறன் என்பவர்க்கு போலீஸார்கள் தகவல் தெரிவித்தனர். மேலும், அவர்கள் தங்கியிருந்த அறையில் மது பாட்டிலும், விஷ மருந்தும் மற்றும் செல்போன், வாகன ஓட்டுநர் உரிமம் ஆகியவைகள் இருந்தது தெரியவந்தது.இருவரும் மதுவில் விஷம் கலந்து குடித்துத்  தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.இதையடுத்து, இருவரது உடல்களையும் போலாஸார்கள் கைப்பற்றிய  உடல் பரிசோதனைக்காக ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மேலும்  இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து