முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை, நெல்லை, திருப்பூருக்கு புதிய போலீஸ் கமிஷனர்கள் தென் மண்டல ஐ.ஜி. சைலேஷ்குமார் மாற்றம்

சனிக்கிழமை, 9 ஜூன் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: தமிழக அரசு 11 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பணி உயர்வு மற்றும் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெறும் எஸ்.மனோகரன், திருப்பூர் சிட்டி போலீஸ் கமிஷனராக, இப்போது அப்பதவியில் உள்ள நாகராஜனுக்கு பதிலாக நியமிக்கப்படுகிறார்.

ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெறும் ஜே.பாஸ்கரன், காலியாக உள்ள, சென்னை ஆபரேஷன்ஸ் பிரிவில் ஐ.ஜி.யாக நியமிக்கப்படுகிறார்.

சென்னை காவல்துறை பயிற்சி பிரிவில் ஐ.ஜி.யாக உள்ள சண்முக ராஜேஸ்வரனுக்கு பதிலாக அப்பதவிக்கு, திருப்பூர் கமிஷனராக இருந்த நாகராஜன் நியமிக்கப்படுகிறார்.

தென் மண்டல போலீஸ் ஐ.ஜி.யாக பதவி வகித்து வரும் சைலேஷ்குமார் யாதவ் மாற்றப்பட்டு, அவருக்கு பதில், சண்முகராஜேஸ்வரன், தென் மண்டல ஐ.ஜி.யாக நியமிக்கப்படுகிறார்.

தென் மண்டல ஐ.ஜி.யாக இருந்த சைலேஷ் குமார் யாதவ், சென்னை ஆயுதப்படை பிரிவு ஐ.ஜி.யாக நியமிக்கப்படுகிறார்.

காவல்துறை நலப்பிரிவு ஐ.ஜி.யாக உள்ள டேவிட்சன் தேவாசிர்வாதம், மதுரை சிட்டி போலீஸ் கமிஷனராக நியமிக்கப்படுகிறார். இப்போது மதுரை போலீஸ் கமிஷனராக உள்ள மகேஷ்குமார் அகர்வால், சென்னை சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி.யாக நியமிக்கப்படுகிறார். இதுவரை அந்த பதவி காலியாக இருந்து வந்தது.

சென்னை கூடுதல் போலீஸ் கமிஷனர் எஸ்.என்.சேஷசாயி, காவல்துறை நலப்பிரிவுக்கு மாற்றப்படுகிறார். சென்னை குற்றப்பிரிவில் ஐ.ஜி.யாக பணியாற்றிய பாஸ்கரன், சென்னையிலுள்ள, தமிழ்நாடு போலீஸ் அகாடமிக்கு பணியமர்த்தப்படுகிறார். சென்னையில் காவலர் தொழில்நுட்ப பிரிவு பிரிவில் டி.ஐ.ஜி. பிரிவில் பணியாற்றிய டாக்டர்.மகேந்தர் குமார் ரத்தோட், திருநெல்வேலி சிட்டி போலீஸ் கமிஷனராக நியமிக்கப்படுகிறார். சென்னை காவலர் தொழில்நுட்ப பிரிவு டி.ஐ.ஜி.யாக ஆசியம்மாள் நியமனம். அவர் தற்போது சென்னை காவல்துறை பயிற்சி பிரிவில் பணியாற்றி வருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து