முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இரு தரப்பு உறவு குறித்து உஸ்பெகிஸ்தான் அதிபருடன் பிரதமர் மோடி ஆலோசனை

ஞாயிற்றுக்கிழமை, 10 ஜூன் 2018      உலகம்
Image Unavailable

பெய்ஜிங் : சீனா சென்றுள்ள பிரதமர் மோடி, உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்ஸியோயெவை  சந்தித்துப் பேசினார். அப்போது, இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து தலைவர்கள் இருவரும் ஆலோசனை நடத்தினர்.

சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள குயிங்டோ நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு கடந்த 2 நாட்களாக நடைபெற்று. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் குயிங்டோ நகருக்கு சென்றார். இதனிடையே, மாநாட்டுக்கு வந்திருந்த உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்ஸியோயெவை மோடி சந்தித்து பேசினார். அப்போது, இந்தியா-உஸ்பெகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து தலைவர்கள் இருவரும் தங்களது கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். இந்தத் தகவல்களை, வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் தனது சுட்டுரைப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து