முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒப்பந்தப்படி செயல்படுத்தவில்லை: இலங்கை துறைமுக திட்டத்துக்கான ரூ. 3800 கோடி உதவி நிறுத்தம் - சீனா அதிரடி நடவடிக்கை

திங்கட்கிழமை, 11 ஜூன் 2018      உலகம்
Image Unavailable

கொழும்பு : இலங்கையில் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் சொந்த மாவட்டத்தில் ஹம்பத் தோட்டா துறைமுகம் உள்ளது. இதை மேம்படுத்த ரூ. 7280 கோடியில் திட்டம் உருவாக்கப்பட்டது. அதை நிறைவேற்ற சீனாவிடம் 99 வருடமாக குத்தகைக்கு ஒப்படைக்கப்பட்டது. அதற்கான ஒப்பந்தம் கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்தது. இதன் மூலம் இந்திய பெருஙகடல் பகுதி தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்த சீனா திட்டமிட்டது. அதற்கு எதிர் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில் ஹம்பத் தோட்டா துறைமுக வளர்ச்சி திட்டத்துக்கு அளித்து வந்த நிதியை சீன

அரசு திடீரென நிறுத்தி விட்டது. அதற்கு வழங்க வேண்டிய இறுதி கட்ட நிதி உதவியான ரூ. 3800 கோடி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஹம்பத் தோட்டா துறைமுக பகுதியில் கேளிக்கை பூங்கா அமைத்து வர்த்தகத்தை மேம்படுத்த சீனா திட்டமிட்டது. அதற்கு இலங்கை அரசு சம்மதிக்கவில்லை. கடல் மற்றும் துறைமுக சார்ந்த  நடவடிக்கைகள் மட்டுமே அங்கு நடைபெற வேண்டும். கேளிக்கை பூங்கா அமைக்கக் கூடாது என மறுத்து விட்டது. இதனால் ஹம்பத் தோட்டா துறைமுக திட்டம் முடிவடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து