முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலம் நகரில் தாம்பரம்-திருநெல்வேலி அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்லவேண்டும்: ரயில்வே நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை:

திங்கட்கிழமை, 11 ஜூன் 2018      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.-  திருமங்கலம் தொகுதி பயணிகள் வசதிக்கென திருமங்கலம் நகரில் முன்பதிவில்லர தாம்பரம்-திருநெல்வேலி அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்லவேண்டும் என ரயில்வே நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரைக்கு அடுத்தபடியாக வளர்ந்து வரும் முக்கியநகரங்களில் ஒன்றாக திருமங்கலம் திகழ்கிறது.தமிழகத்தின் இரண்டாவது மிகப்பெரிய கப்பலூர் சிட்கோ தொழிற்பேட்டை, கள்ளிக்குடி,டி.கல்லுப்பட்டி,திருமங்கலம் ஆகிய மூன்று யூனியன்கள், பேரையூர், திருமங்கலம் என இரண்டு தாலுகாக்கள் போன்றவற்றுடன் தினம் தோறும் சென்னை செல்லும் வணிகர்கள்,வர்த்தகர்கள்,தலைமைச்செயலகம் செல்வோர்,ராணுவத்தில் பணியாற்றிடும் ஆயிரக்கணக்கான வீரர்கள் போன்றோர் திருமங்கலம் ரயில் நிலையத்திலிருந்து சென்னை செல்வதையே வழக்கமாக கொண்டுள்ளனர்.இருப்பினும் திருமங்கலத்திலிருந்து சென்னை செல்வதற்கு முத்துநகர் மற்றும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று உதவுகின்றன.தற்போது மேற்கண்ட இருரயில்களிலும் கூட்டம் அலைமோதி வருவதால் திருமங்கலம் பகுதி ஏழை எளிய மக்களுக்கு படிக்கட்டு மற்றும் பாத்ரூம் பயணமே மிஞ்சுகிறது.
இந்நிலையில் ஏழைகளின் ரதம் என்றழைக்கப்படும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில்  சேவையை தாம்பரம்-திருநெல்வேலி இடையே ரயில்வே நிர்வாகம் துவங்கியுள்ளது.இந்த ரயிலில் குறைந்த கட்டணத்தில் அனைத்து பெட்டிகளும் முன்பதிவில்லாததாகவும் இருப்பதால் பொதுமக்களிடையே பெரும்வரவேற்பை பெற்றுள்ளது.தற்போது தினந்தோறும் இயக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் பல்வேறு சிறிய ரயில் நிலையங்களில் நின்று சென்றாலும் மதுரை மற்றும் விருதுநகர் சந்திப்புகளுக்கு இடையிலுள்ள திருமங்கலம் ரயில் நிலையத்தில்நிற்காமல் செல்வது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கணிணி முன்பதிவு மையத்துடன் அனைத்து வசதிகளும் நிறைந்து வசூலை வாரி வழங்கிடும் திருமங்கலம் ரயில் நிலையத்தில் தாம்பரம்-திருநெல்வேலி அந்தியோதயா ரயில் நின்று செல்லாததது வேதனையளிப்பதாக வணிக மற்றும் வர்த்தக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.எனவே திருமங்கலம் தொகுதியிலுள்ள ஏழை எளிய மக்கள் பயன்பெற்றிடும் வகையில் தாம்பரம்-திருநெல்வேலி இடையே இருமார்க்கத்தில் இயக்கப்படும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் திருமங்கலம் ரயில் நிலையத்தில் நின்று செல்லவேண்டும் என்பதே திருமங்கலம் தொகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து