முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென் சீன கடலில் மீண்டும் ஏவுகணையை நிறுத்திய சீனா

செவ்வாய்க்கிழமை, 12 ஜூன் 2018      உலகம்
Image Unavailable

பெய்ஜிங்: தென் சீனக் கடல் பகுதியில் மீண்டும் ஏவுகணை உள்ளிட்ட ஆயுதங்களை சீனா நிறுத்தியது.

தென் சீனக் கடல் பகுதியில் ஏற்கெனவே ஆயுதங்களை சீனா குவித்ததாக அமெரிக்கா புகார் தெரிவித்திருந்தது. பல நாடுகளின் குற்றச்சாட்டுக்குப் பிறகு ஆயுதங்களை சீனா அகற்றியது. இந்நிலையில் மீண்டும் ஏவுகணை உள்ளிட்ட ஆயுதங்களை சீனா நிறுத்தியுள்ளது. யாங்ஜிங் தீவில் தரையிலிருந்து வானில் உள்ள இலக்குகளை தாக்கும் ஏவுகணைகளை சீனா நிறுத்தியுள்ளதாக இஸ்ரேலைச் சேர்ந்த உளவு நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்நிறுவனம் எடுத்த செயற்கைகோள் படங்களில் இது தெரிய வந்துள்ளது. ஏற்கெனவே ஏவுகணைகள் வைக்கப்பட்ட இடங்களில் மீண்டும் அவை நிலைநிறுத்தப்பட்டுள்ள புகைப்படங்களை அந்த உளவு நிறுவனம் வெளியிட்டுள்ளது. சீனாவின் நடவடிக்கைக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து