முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீட் தேர்வை இனி சி.பி.எஸ்.இ. நடத்தாது மத்திய மனித வள அமைச்சகம் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 12 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: நீட் தேர்வை இனி சி.பி.எஸ்.இ நடத்தாது என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மூலம் நடத்தப்படுகிறது. நீட் தேர்வினை நடத்தும் சி.பி.எஸ்.இ. நீட் தேர்வுக்கு வினாத்தாள்கள் தயாரித்ததில் சரியான மொழிபெயர்ப்பு இல்லை என்றும், குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் இதுதொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், நீட் தேர்வை இனி சி.பி.எஸ்.இ. நடத்தாது என்ற அறிவிப்பை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

குறிப்பாக 2017-18 ஆண்டில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தில் இனி நீட் தேர்வினை தேசிய தேர்வு முகமை நடத்தும் என்று முடிவு எடுக்கப்பட்டது. அதனடிப்படையிலேயே 2019-ம் ஆண்டிற்கான நீட் தேர்வை நடத்த தேசிய தேர்வு முகமை நடத்தும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

மேலும், மாணவர்கள் நீட் தேர்வை இனி வரும் காலங்களில் ஆன்லைனில் எழுதுவது குறித்து பரிசீலித்து வருவதாகவும், அதற்கான நடைமுறைகள் குறித்து தொடர்ந்து அறிவிப்புகள் வெளியாக உள்ளன என்று மத்திய மனிதவள மேம்பாட்டுதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து