முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் இடியுடன் புழுதி காற்று வீசும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

வியாழக்கிழமை, 14 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி: தெற்கு கர்நாடகா பகுதிகள், அசாம், மேகாலயாவில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் உள் தமிழகத்தின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய புழுதி காற்று வீசக் கூடும் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மிக கனத்த மழை
இது குறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, கடலோர கர்நாடகா மற்றும் தெற்கு கர்நாடக மாவட்டங்களில் கனத்த அல்லது மிக கனத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதே போல அசாம், மேகாலயாவிலும், கேரளாவின் சில பகுதிகளிலும், மேற்கு வங்கம், சிக்கிம், அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர், மிசோராம் மற்றும் திரிபுரா மாநிலங்களின் சில பகுதிகளிலும் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.

புழுதி காற்று...
உள் தமிழகத்தின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய புழுதி காற்று வீசக்கூடும். இதே நிலை, தெலுங்கானா, ராயலசீமா, வடக்கு ஆந்திர கடலோர பகுதிகள், மேற்கு வங்கம், பீகார், ஜார்கண்ட் மற்றும் ஒடிசாவிலும் நீடிக்க கூடும். தமிழகம், கர்நாடகா, கேரளா, ஒடிசா, அந்தமான் நிகோபார் தீவு கடலோர பகுதிகளில் மணிக்கு அதிகபட்சம் 55 கி.மீ வேகத்தில் காற்று வீசக் கூடும். எனவே, இப்பகுதிகளில் உள்ள மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து