முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜீவ் கொலையாளிகள் 7 பேரையும் விடுவிக்க அரசு தொடர்ந்து முயற்சி அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டி

வெள்ளிக்கிழமை, 15 ஜூன் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: தமிழக அரசு ராஜீவ் காந்தி கொலை கைதிகள் 7 பேரையும் விடுவிக்க  தொடர்ந்து முயற்சித்து வருவதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

விடுவிக்க கோரிக்கை
ராஜீவ் கொலை கைதிகளான முருகன், பேரறிவாளன், சாந்தன் உள்ளிட்ட 7 பேரும் நீண்ட நாட்களாக ஜெயில் தண்டனையை அனுபவித்து வருகிறார்கள். இதனால் இவர்களை விடுவிக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் தனது மகனின் விடுதலைக்காக போராடி வருகிறார். இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த போது ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்க நடவடிக்கை எடுத்தார்.

ஜனாதிபதி மறுப்பு
இந்த நிலையில் ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரையும் மத்திய அரசு விடுதலை செய்ய முடிவு செய்திருப்பதாக 2 நாட்களுக்கு முன்னர் தகவல் வெளியானது. இது தொடர்பாக மத்திய உள்துறை, தமிழக அரசிடம் தகவல்களையும் கேட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் ராஜீவ் கொலை கைதிகளை விடுவிக்கும் எண்ணம் ஏதும் இல்லை என்று ஜனாதிபதி மாளிகை தகவல்கள் தெரிவித்துள்ளன. இது 7 பேரின் விடுதலை விவகாரத்தில் புதிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இந்தநிலையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் நேற்று சென்னையில் நிருபர்கள் இதுதொடர்பாக கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து முயற்சி...
இதற்கு விளக்கம் அளித்து அவர் கூறியதாவது., ராஜீவ் கொலையாளிகள் விவகாரம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இருப்பினும் தமிழக அரசு அவர்களை விடுவிப்பதற்காக தொடர்ந்து முயற்சித்து வருகிறது. தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது அதுபற்றி உரிய விளக்கத்தை அளிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து