முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2.5 கோடி மெக்சிகோ அகதிகளை ஜப்பானுக்கு அனுப்பி வைத்து விடுவேன் அந்நாட்டு பிரதமருக்கு டிரம்ப் மிரட்டல்

சனிக்கிழமை, 16 ஜூன் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்: அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள மெக்ஸிகோ நாட்டினரை ஜப்பானுக்கு அனுப்பி வைத்து விடுவதாக அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபேக்கு, டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து ட்ரம்ப் வாஷிங்டனில் கூறியதாவது, பிறநாட்டு மக்கள் குடியேறுவதால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பெரும் பிரச்சினையை சந்தித்து வருகின்றன. ஆனால் இதை உணராத ஜப்பான் போன்ற நாடுகள், அகதிகளாக வரும் மக்களை ஏற்று கொள்ள வேண்டும் எங்களுக்கு அறிவுரை கூறுகின்றன. இது எவ்வளவு பெரிய சுமையை ஏற்படுத்தும் என அந்த நாடுகள் உணர மறுக்கின்றன.

எங்கள் நாட்டில் தஞ்சமடைந்துள்ள 2.5 கோடி மெக்ஸிகோ நாட்டினரை ஜப்பானுக்கு அனுப்புகிறோம். அவர்களை வைத்துக் கொண்டு ஜப்பான் நாட்டினர் எப்படி சமாளிக்கிறார்கள் என பார்க்கலாம். ஷின்சோ அபே பதவியை துறந்து விடுவார். அறையில் இருந்து கொண்டு என்ன வேண்டுமானாலும் பேசலாம். இவ்வாறு டிரம்ப் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து