முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்னும் எத்தனை பேரை இழக்கப் போகிறோம்? காஷ்மீர் பிரச்சினை குறித்து சிதம்பரம் வேதனை

சனிக்கிழமை, 16 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: காஷ்மீர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாண வேண்டியவர்கள் கடமை தவறியதன் விளைவால் இன்னும் எத்தனை ஜவான்களையும், சாதாரண குடிமக்களையும் இழக்கப் போகிறோம்? என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் டுவிட்டரில் கேள்வி எழுப்பி உள்ளார்.

காஷ்மீர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாண வேண்டியவர்கள் தங்கள் கடமை தவறியதன் விளைவு தான் பத்திரிகை ஆசிரியர் சுஜாத் புகாரியின் படுகொலை சம்பவம் என்று தெரிவித்துள்ளார். அவரது மற்றொரு பதிவில், கர்நாடகத்தில் காங்கிரஸ் - ஜனதா தள அரசுக்கு மக்கள் ஆதரவு 56 சதவீதம், இயற்கையின் அருள் 100 சதவீதம் என்றும் வானம் பொழிந்து வையம் வாழட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து