முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எல்லையில் போர்நிறுத்தத்தை நீட்டிப்பது குறித்து பிரதமர் மோடி ஆலோசனை

சனிக்கிழமை, 16 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி: ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு, காஷ்மீரில் அறிவிக்கப்பட்டிருந்த போர்நிறுத்தத்தை நீட்டிப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உளவுத்துறை மற்றும் ராணுவ உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

காஷ்மீரில் உள்ள கட்சிகள் ஒருமித்த குரலில் போர்நிறுத்தத்தை நீட்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளன. காஷ்மீரில் தொடரும் தீவிரவாத தாக்குதல்கள், பத்திரிகையாளர் மற்றும் ராணுவ வீரர்களின் கொடூர கொலைகள் குறித்து மத்திய அரசு ஆராய்ந்து வரும் நிலையில், சண்டை நிறுத்தத்தை நீட்டிப்பது சாத்தியம் தானா என்று பிரதமர் ஆலோசனை நடத்தியுள்ளார்.  ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்டிருந்த ஒரு மாத சண்டை நிறுத்தம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து