முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கெஜ்ரிவால் போராட்டம் 6-வது நாளை எட்டியது வெளியேற்ற முயற்சிப்பதாகவும் புகார்

சனிக்கிழமை, 16 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: தமது அரசின் திட்டங்களுக்கு ஒப்புதல் தர வலியுறுத்தி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை நிலை ஆளுநர் பைஜால் மாளிகை சோபாவில் அமர்ந்து 6-வது நாளாக உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகிறார்.

ரேஷன் பொருட்களை வீடுகளுக்கே நேரடியாக சென்று தரும் திட்டத்துக்கு ஒப்புதல் தேவை, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆளுநர் மாளிகை அலுவலகத்தில் அமர்ந்து முதல்வர் கெஜ்ரிவால் மற்றும் அமைச்சர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த உள்ளிருப்புப் போராட்டம் நேற்று 6-வது நாளை எட்டியுள்ளது.

தங்களது போராட்டத்தை முறியடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தங்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற முயற்சிப்பதாகவும் கெஜ்ரிவால் டுவிட்டரில் புகார் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து