முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

‘இந்துக்களை நேசிப்பது என்பது முஸ்லிம்களை வெறுப்பதாக அர்த்தமா?’ மம்தா பானர்ஜி கேள்வி

ஞாயிற்றுக்கிழமை, 17 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா: இந்துக்களை நேசிப்பது என்பது முஸ்லீம்களை வெறுப்பதாக அர்த்தமா என்று மேற்கு வங்க முதல்வர் மம்தாபானர்ஜி கேள்வியெழுப்பியுள்ளார்.

கொல்கத்தாவில் நேற்று நடந்த ரமலான் பண்டிகை தொடர்பான சிறப்புக் கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

நான் முஸ்லிம்களை சாந்தப்படுத்துகிறேன் என்று (பாஜக)சிலரும், சில அமைப்புகளும் மீது குற்றம்சாட்டுகிறார்கள். நான் அவர்கள் முன் வைக்கும் கேள்வி என்பது, இந்துக்களை விரும்புவது, நேசிப்பது என்பது முஸ்லிம்களை வெறுப்பது என்று அர்த்தமா. நான் அனைத்துச் சமூகத்தினரையும், மதத்தினரையும் மதிக்கிறேன், நேசிக்கிறேன். இந்த நாடு அனைவருக்குமானது.

நான் முஸ்லிம்களுக்கு ஆதரவாக நடக்கிறேன் என்று குற்றம்சாட்டுபவர்கள் எல்லாம், இந்துக்களுக்கும் நண்பர்களாக இல்லை, முஸ்லிம்களுக்கும் நண்பர்களாக இல்லை.

நாம் ஒருவிஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். தீவிரவாதிகள் எந்த மதத்தையும் சார்ந்தவர்கள் இல்லை. வரும் 2019-ம் தேர்தலில் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து, வகுப்புவாத சக்திகளுக்கு எதிராகவும், தாக்குதல் நடத்துபவர்களுக்கு எதிராகவும் போரிட்டு, நாட்டை அவர்களிடம் இருந்து விடுவிக்கவேண்டும். ஒன்றாக இணைந்து உழைத்து புதிய இந்தியாவைக் கட்டமைக்க வேண்டும்.
இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து