முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாணியம்பாடி அருகே மினிலாரி கவிழ்ந்து விபத்து: பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு

ஞாயிற்றுக்கிழமை, 17 ஜூன் 2018      தமிழகம்
Image Unavailable

வேலூர்: வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஆந்திர மாநில பகுதியில் மாங்காய்கள் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே, ஆந்திரம் மாநிலத்தின் பெத்தவாங்கா பகுதியில் 50 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 7 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த 13 பேர் வாணியம்பாடி அரசு மருத்துவமனையிலும், 10 தொழிலாளர்கள் குப்பம், சித்தூர் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் விபத்தில் சிக்கி வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நாராயணன் (30) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. மேலும் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து