எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி : தமிழகத்திற்கு என்னென்ன தேவை என்பதை பிரதமர் மோடியிடம் வலியுறுத்தி உள்ளேன் என்று டெல்லியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக்கின் 4-வது நிர்வாக குழு கூட்டம் நேற்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது.
2022 திட்டத்திற்கு ...
நான்காவது நிதிஆயோக் கூட்டம் இன்று (நேற்று) நடைபெற்றது. தமிழகத்தின் சார்பாக நிறைய கோரிக்கைகள் வைத்திருக்கின்றோம். அம்மாவின் 2023 தொலைநோக்கு பார்வையுடன் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மாநில வளர்ச்சிக்கு ஒரு முன்மாதிரி திட்டமாக விளங்குவதாக கருத்தில் கொண்டு, அதை இந்தியாவிற்கான 2022 திட்டத்திற்கு வழிகாட்டியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். அதேபோல, விவசாயிகள் வளம்பெற நவீனமுறையில் வேளாண் விற்பனைக் கூடங்களை மேம்படுத்த கூடுதல் நிதி வழங்கிட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தப்பட்டது. விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறி மற்றும் பழங்களை பெருநகரங்களில் நேரடியாக விற்பனை செய்ய ஏதுவாக போக்குவரத்து வசதி உள்ளிட்ட உரிய கட்டமைப்புகளை உருவாக்கிட நிதி வழங்கிட வேண்டும் என்று மத்திய அரசிற்கு கோரிக்கை விடுத்திருக்கின்றேன்.
அனைவருக்கும் நல்வாழ்வு...
நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் நீர் மேலாண்மை பணிகளுக்கு முக்கியத்துவம் தருவது குறித்தும், தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படுத்தப்படும் குடிமராமத்து திட்டத்தைப் பற்றியும், விளக்கி மத்திய அரசிற்கு குறிப்பிட்டோம். அதற்கு தேவையான நிதிஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கேட்டு இருக்கின்றோம். மக்கள் நல்வாழ்வுத் துறையில் “அனைவருக்கும் நல்வாழ்வு” என்ற முன்னோடி திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும், தற்போது தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை மத்திய அரசின் புதிய திட்டத்துடன் ஒருங்கிணைந்து அதிக மக்கள் பயன்பெற வழிவகை செய்ய வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தப்பட்டு இருக்கிறது. இந்தியாவிற்கே முன்மாதிரியாக தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படும் ஊட்டச்சத்து மற்றும் தடுப்புப்பூசி திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டு இருக்கிறது.
மருத்துவக் கல்லூரி ...
இராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்கள் மத்திய அரசால் வளர்ச்சி நோக்கி செல்லும் மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவ்விரு மாவட்டங்களிலும், மருத்துவக் கல்லூரி துவக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தப்பட்டு இருக்கிறது. அதேபோல, விருதுநகர் மாவட்டத்திலே, பல்மருத்துவமனை அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த பல்மருத்துவமனையினை அமைப்பதற்கு மத்திய அரசு விரைந்து அனுமதி கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு இருக்கிறது.
துரித நடவடிக்கை...
அனைத்து அதிகாரம் படைத்த காவேரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவேரி நதிநீர் முறைப்படுத்தும் குழு அமைப்பதற்கான அறிக்கை வெளியிட்டதற்கு பிரதமருக்கு நன்றி தெரிவித்து, இவ்விரு அமைப்புகளும் உடனடியாக செயல்படுத்திட துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மத்திய அரசிடம் வலியுறுத்தி இருக்கின்றோம். 15-வது நிதி ஆணையத்தின் ஆய்வு வரம்புகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. அதில் 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை கணக்கில் கொண்டு நிதி பங்கீடு செய்வதாக உள்ளது. இது தமிழ்நாடு மக்களின் நலனிற்கு எதிராக அமையும் என்பதால், நிதி பங்கீட்டை 1971ஆம் ஆண்டு மக்கள் தொகையை அடிப்படையாக கணக்கில் கொண்டு வழங்கிட வேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்தி இருக்கின்றோம்.
மேற்கண்ட கோரிக்கைகளை எல்லாம் வைத்துள்ளோம். அதுமட்டுமல்லாமல், விளக்கமாக தமிழ்நாட்டிற்கு என்ன என்ன தேவை என்பதை பிரதமரிடத்திலே வழங்கியிருக்கிறோம்.
கேள்வி: பிரதமர் தனியாக சந்தித்து பேச முடிந்ததா. குறிப்பாக காவேரி விவகாரமாக இருக்கட்டும், கிடைக்க வேண்டிய நிலுவை தொகையாக இருக்கட்டும், இதுமாதிரியான விஷயங்கள் குறித்து தனியாக பேச முடிந்ததா?
பதில்: தனியாக பேசினோம். பிரதமர் அவர்கள் கூட்டம் முடிந்துவிட்டு வரும்போது, அவரிடத்திலே தமிழ்நாட்டினுடைய நிலைமையை எடுத்து கூறியிருக்கின்றோம். தேவையான நிதியை வழங்க வேண்டும் என்று கேட்டுயிருக்கின்றோம்.
கேள்வி: பிரதமர் ஏதாவது உத்தரவாதம் கொடுத்திருக்கிறாரா?
பதில்: அப்படியெல்லாம் எந்த உத்தரவாதமும் கொடுக்கவில்லை.
கேள்வி: ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து பிரதமர் உங்களிடம் ஏதேனும் கேட்டாரா?
பதில்: ஏற்கனவே விசாரணையில் இருக்கிறது.
கேள்வி: காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகா மாநிலம் தற்போது வரை உறுப்பினர்கள் பெயர் ஏதுவும் கொடுக்கவில்லை. இதுதொடர்பாக மீண்டும் வலியுறுத்தினீர்களா?
பதில்: இது தொடர்பாக கூட்டத்திலே பேசியிருக்கின்றேன். விரைந்து குழு அமைத்து, அந்த குழு முதல் கூட்டத்தை கூட்டி, தமிழகத்திற்கு தேவையான நீர் திறந்துவிட வேண்டுமென்று கோரிக்கை வைத்திருக்கின்றோம்.
கேள்வி: தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் நீங்கள் நேரில் போகவில்லை என்ற குற்றச்சாட்டு நீண்டு நாட்களாகவே இருந்து வருகிறது.
பதில்: அதாவது எங்களுடைய துணை முதலமைச்சர் மற்ற அமைச்சர்கள் எல்லாம் நேரடியாக போய் அவர்களுக்கு என்னென்ன தேவையோ அத்தனை வசதிகளும் செய்து கொடுத்துள்ளோம். மருத்துவமனையிலே சிகிச்சை பெறுகின்ற அனைவருமே தினந்தோறும் எங்களுடைய இயக்கத்தை சேர்ந்தவர்கள் பார்த்து கொண்டு வருகிறார்கள். அந்த மாவட்ட அமைச்சர் பலமுறை நேரிலே சந்தித்து, அவர்களுக்கு தேவையான உதவிகள் அனைத்தும் செய்யப்பட்டு இருக்கிறது. ஒருவருக்கு கால் அடிபட்டு, கால் எடுக்கப்பட்டு இருக்கிறது. அவரை சென்னையிலே மருத்துவமனையிலே சேர்த்து செயற்கை கால் பொருத்தப்பட்டு அவருக்கு பணி வழங்க வேண்டும் என்று கேட்டிருந்தார், அதுவும் வழங்குவதாக அவருக்கு வாக்குறுதி கொடுத்துள்ளோம்.
கேள்வி: எந்த ஒரு வாழ்வதார போராட்டம் நடந்தாலும் காவல்துறையை வைத்து தமிழக அரசு அடக்குகிறது என்ற குற்றச்சாட்டு இருக்கிறது.
பதில்: இது தவறான கருத்து. இது அத்தனை ஊடகங்களுக்கும் தெரியும். பத்திரிகையாளர்களுக்கும் தெரியும். அரசு வந்து ஏற்கனவே 9.4.2018 அன்றே ஸ்டெர்லைட் நிர்வாகம் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திலே மேலும் ஐந்து ஆண்டு காலத்திற்கு எங்களுக்கு அனுமதி வேண்டுமென்று விண்ணப்பம் அளித்திருந்தார்கள். அந்த விண்ணப்பத்தை 9.4.2018 அன்று நிராகரிக்கப்பட்டு விட்டது. அதை 13.4.2018 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பத்திரிகை வாயிலாக விளம்பரப்படுத்தினார்கள். ஆகவே, இந்த ஆலை இயங்காது. மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலமாக அதை தடை செய்யப்பட்டு இருக்கிறது. இந்த ஆலையை இயக்க முடியாது என்ற அறிவிப்பும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆலையை திறக்கமுடியாத அளவிற்கு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என்பதை போராட்டக் குழு அனைவருக்கும் தெளிவாக சொல்லப்பட்டு இருக்கிறது. ஆகவே, அரசை பொறுத்தவரைக்கும், அந்த ஆலை மூடுவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கப்பட்டு வருகிறது என்ற செய்தியை மக்களுக்கு தெரிவிக்கப்பட்டு இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 17 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.