முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாகப்பட்டினத்தில் மண் சரிந்ததில் உயிரிழந்த இரண்டு குழந்தைகளின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 17 ஜூன் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: நாகப்பட்டினத்தில் மண் சரிந்ததில் மூச்சு திணறி உயிரிழந்த இரண்டு பெண் குழந்தைகளின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.


இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி  வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

மண் சரிந்தது
நாகப்பட்டினம் மாவட்டம், குற்றாலம் வட்டம் மற்றும் நகரத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவரது வீட்டிற்கு, விருந்தினர்களாக வந்திருந்த தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம் ஆணைக்காரன்பாளையத்தைச் சேர்ந்த சுதாகர் என்பவரின் மகள் வர்ஷினி மற்றும் தேவேந்திரன் என்பவரின் மகள் சியாமளா ஆகியோர் இன்று (நேற்று) கொம்புகாரன் குட்டையில், மண் தோண்டி விளையாடிக் கொண்டிருந்த போது, திடீரென மண் சரிந்து விழுந்ததில், மூச்சுத் திணறல் ஏற்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

ரூ.1 லட்சம் நிதி
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த வர்ஷினி மற்றும் செல்வி சியாமளா ஆகிய இரண்டு குழந்தைகளின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.மண் சரிந்து விழுந்து உயிரிழந்த வர்ஷினி மற்றும் சியாமளா ஆகிய இரண்டு குழந்தைகளின் குடும்பதினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து  வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து