முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நைஜீரியாவில் தற்கொலைப்படையினரின் குண்டுவெடிப்பில் 31 பேர் பரிதாப பலி

திங்கட்கிழமை, 18 ஜூன் 2018      உலகம்
Image Unavailable

கானோ : நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் இரு இடங்களில் தற்கொலைப் படையினர் கொண்டு குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியதில் 31 பேர் உயிரிழந்தனர். இந்த குண்டுவெடிப்பை போகோ ஹராம் தீவிரவாதிகள் நிகழ்த்தியதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இது குறித்து ராணுவ அதிகாரி பாபுகரா கோலா கூறும் போது,

நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியிலுள்ள தாம்போவா பகுதியில் தற்கொலை படையினர் 2 பேர் பயங்கரமான வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். தங்களது உடலில் வெடிகுண்டுகளை கட்டிக் கொண்டு அதை கூட்டமான இடத்தில் வெடிக்க செய்துள்ளனர். இதில் 31 பேர் அதே இடத்திலேயே இறந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து