முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி பல ஆண்டுகளுக்கு தொடரும்: ஜெட்லி

திங்கட்கிழமை, 18 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : சா்வதேச அளவில் வேகமாக வளா்ந்து வரும் மிகப்பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது. இது பல ஆண்டுகளுக்கு தொடரும் என்று மத்திய அமைச்சா் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பொருளாதார மேம்பாடு குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் அருண் ஜெட்லி பதிவிட்டதாவது:

இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி கடந்த காலத்தைவிட எதிர்காலத்தில் மிகவும் சிறப்பானதாகவே இருக்கும். சா்வதேச அளவில் வேகமாக வளா்ந்து வரும் மிகப்பெரிய பொருளாதார சக்தியாக நமது நாடு உருவெடுத்துள்ளது. இந்த வளா்ச்சி மேலும் பல ஆண்டுகளுக்கு தொடரும். அண்மை காலத்தில் ரூபாய் நோட்டு வாபஸ், சரக்கு-சேவை வரி அமல், திவால் சட்ட மசோதா போன்ற நாட்டின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது. சிலா் இதனை கடுமையாக எதிர்த்ததுடன் விமா்சித்தும் வருகின்றனர். நாட்டின் நிதிக்கட்டமைப்பை மேம்படுத்தும் நடவடிக்கைகளை மட்டுமே இந்த அரசு மேற்கொள்ளும் என்று ஜெட்லி தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து