எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மயிலாடுதுறை : தி.மு.க.வின் செயல்படாத தலைவர் (ஸ்டாலின்) செயல்படக் கூடிய இந்த அரசை குறை கூறுகிறார். காவிரி விவகாரத்தில் விவசாயிகளுக்கு துரோகம் இழைத்தது தி.மு.க.வும், கருணாநிதியும்தான் என்று மயிலாடுதுறையில் நடந்த காவிரி நதிநீர் போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பேசினார்.
காவிரி பிரச்சினையில் பல்வேறு சட்டப் போராட்டங்களை நடத்தி அதில் வெற்றி கண்டவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை கெஜட்டில் வெளியிடச் செய்ததும் அவரே. இது தனது 30 ஆண்டு கால அரசியல் வாழ்வில் தனக்கு கிடைத்த வெற்றி என்று அவரே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அவரது வழியில் செயல்படும் அ.தி.மு.க. அரசு தற்போது காவிரி மேலாண்மை ஆணையத்தையும், காவிரி ஒழுங்குமுறை குழுவையும் அமைத்து வெற்றி கண்டுள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் வெற்றி விளக்க கூட்டங்களை நடத்துமாறு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தமது கட்சியினருக்கு உத்தரவிட்டிருந்தனர். அதன்படி தமிழகம் முழுவதும் வெற்றி விளக்க கூட்டங்கள் நடந்து வருகின்றன.
மயிலாடுதுறையில் பொதுக்கூட்டம்
இந்நிலையில் நேற்று நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் காவிரி நதிநீர் போராட்ட வெற்றி விளக்க கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். முன்னதாக அவர் மயிலாடுதுறை சென்ற போது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முதல்வரை அமைச்சர்கள் ஓ.எஸ். மணியன், துரைக்கண்ணு மற்றும் பாரதிமோகன் எம்.பி. உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்றனர். அதன் பிறகு நடைபெற்ற கூட்டத்தில் முதல்வர் பேசியதாவது,
1970-ம் ஆண்டிலேயே காவிரி பிரச்சினை உருவெடுத்தது. அதற்கு அடுத்த ஆண்டு அதாவது 1971-ல் அப்போதைய தி.மு.க. அரசு சட்டமன்றத்திலும், சட்ட மேலவையிலும் தீர்மானம் நிறைவேற்றி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்கள். ஆனால் 1972-ம் ஆண்டிலேயே அந்த வழக்கை வாபஸ் பெற்றுக் கொண்டார்கள். அப்போதைய பிரதமராக இருந்த இந்திரா காந்தி அம்மையார் கேட்டுக் கொண்டதற்கிணங்க அந்த வழக்கை கருணாநிதி வாபஸ் பெற்றார். அப்போதே விவசாயிகளை ஏமாற்றியவர் கருணாநிதி. இந்த வழக்கை தொடர்ந்து நடத்தியிருந்தால் காவிரி பிரச்சினைக்கு அப்போதே தீர்வு ஏற்பட்டிருக்கும். ஏன் வழக்கை வாபஸ் பெற்றீர்கள். ஆக, மக்களை பற்றி கவலைப்படாத அரசாக தி.மு.க. அரசு இருந்தது. அதன் பிறகு விவசாயிகள் சங்கம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. 1986-ல் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். நடுவர் மன்றம் அமைக்க கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். நடுவர் மன்றம் அமைக்கப்பட்டதே அவரது முயற்சியால்தான். அவரது மறைவுக்கு பிறகு அம்மா (ஜெயலலிதா) பல்வேறு சட்டப் போராட்டங்களை நடத்தினார். அதன் பலனாக நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு கெஜட்டில் வெளியிடப்பட்டது. மத்தியிலும், மாநிலத்திலும் தி.மு.க. ஆட்சி அதிகாரத்தில் இருந்தார்கள். இவர்கள் காவிரி பிரச்சினையில் என்ன நடவடிக்கையை எடுத்தார்கள். அழுத்தம் கொடுக்கவில்லை என்று எங்களை சொல்லும் நீங்கள் காவிரி பிரச்சினையில் என்ன அழுத்தம் கொடுத்தீர்கள்.
துரோகம் இழைத்தது தி.மு.க.
ஆக, காவிரி பிரச்சினையில் துரோகம் இழைத்தது தி.மு.க.வும், அதன் தலைவர் கருணாநிதியும்தான். ஆனால் அ.தி.மு.க. அரசு அப்படியல்ல. நாடாளுமன்றத்தில் கிட்டத்தட்ட 22 நாட்கள் அ.தி.மு.க. எம்.பி.க்கள் காவிரி பிரச்சினைக்காக உரிமைக்குரல் எழுப்பினார்கள். அதை மறக்க முடியுமா? நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்படும் அளவிற்கு நமது எம்.பி.க்கள் அங்கே அழுத்தம் கொடுத்தார்கள். தி.மு.க. அமைச்சர்கள் அதை செய்தார்களா? அப்படி செய்திருந்தால் விடிவுகாலம் பிறந்திருக்குமே! சுய லாபத்திற்காக பதவியில் இருந்தவர்கள் தி.மு.க.வினர்.
செயல்படாத தலைவர்
தி.மு.க.வின் செயல்படாத தலைவர் (ஸ்டாலின்) செயல்படக் கூடிய இந்த அரசை குறைகூறுகிறார். இவரெல்லாம் செயல் தலைவரா? அன்றைய முதல்வர் ஜெயலலிதா காவிரி பிரச்சினைக்காக அன்றைய பிரதமர் மன்மோகன்சிங்கை பலமுறை சந்தித்தார். ஆணையம் அமைக்க கோரி பல கடிதங்களை எழுதினார். நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட செய்ததும் அம்மாதான். அதனால் அவருக்கு பிரம்மாண்ட பாராட்டு விழா நடைபெற்றது. பொன்னியின் செல்வி என்று அவருக்கு பட்டம் கொடுத்தார்கள். ஆக, காவிரி பிரச்சினையில் கிடைத்த வெற்றியில் அ.தி.மு.க.வுக்கு பெரும் பங்கு உள்ளது. காவிரி பிரச்சினையை தீர்த்த அரசு அ.தி.மு.க. அரசு. உச்சநீதிமன்ற ஆணைப்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு அது அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது. ஆணையத்திற்கான உறுப்பினர்களையும் தமிழகம், கேரளம், புதுச்சேரி அரசுகள் வெளியிட்டு விட்டன. ஆனால் கர்நாடகம் மட்டும் உறுப்பினர் பெயரை வெளியிட மறுக்கிறது. அதனால்தான் டெல்லி சென்ற நான் காவிரி ஆணையத்தை கூட்ட வேண்டும். எங்களுக்குரிய தண்ணீரை பெற்றுத்தர வேண்டும் என்று பிரதமரிடமும், நிதின் கட்காரியிடமும் வலியுறுத்தினேன். 14 ஆண்டுகள் தி.மு.க. ஆட்சியில் இருந்தது. காவிரி பிரச்சினைக்காக இவர்கள் போராட்டம் நடத்தினார்களா? ஆனால் மறைந்த முதல்வர் அம்மா இப்பிரச்சினையில் நடவடிக்கை கோரி 4 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். விவசாயிகளின் உரி்மைக்காக போராடும் அ.தி்.மு.க. அரசு. இந்த விஷயத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை கூட நாங்கள் தொடர்ந்தோம். ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்காவிட்டால் போராட்டம் நடத்துவேன் என்கிறார் ஸ்டாலின். அணையில் நீர் இருந்தால்தானே திறக்க முடியும். தண்ணீரை வைத்து அரசியல் செய்ய நினைக்கிறார் ஸ்டாலின். யார் ஆட்சியில் இருந்தாலும் தண்ணீர் இல்லாமல் அணையை திறக்க முடியாது. இவ்வாறு பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. ஆட்சியில் ஜூன் 12-ம் தேதியை தாண்டி தண்ணீர் திறந்து விடப்பட்ட நாட்களின் பட்டியலை குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், தமிழகம் உணவு உற்பத்தியில் முதலிடம் வகிப்பதை சுட்டிக் காட்டினார். சிறு, குறு விவசாயிகளின் கூட்டுறவு கடன்களை ரத்து செய்தது அ.தி.மு.க. ஆட்சிதான் என்று குறிப்பிட்ட முதல்வர், நான் விவசாய குடும்பத்தில் பிறந்தவன் என்பதால் விவசாயிகள் நிலை எனக்கு தெரியும் என்றும் குறிப்பிட்டார். தமிழகத்தில் நடந்து வரும் குடிமராமத்து பணிகளையும் குறிப்பிட்ட அவர், அதற்காக இந்த ஆண்டு ரூ. 328 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதையும் சுட்டிக் காட்டினார். மேட்டூர் அணையை திறக்க முடியாத காரணத்தால்தான் குறுவை தொகுப்பு திட்டம் அறிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். விவசாயிகளின் நலன் காக்கும் அரசு அ.தி.மு.க. அரசு. விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கிய அரசு அ.தி.மு.க. அரசு. காப்பீட்டு திட்டம் மூலம் பல்வேறு நலன்களை அவர்களுக்கு வழங்கியது அ.தி.மு.க. அரசு என்று கூறிய அவர், நிலத்தடி நீரை உயர்த்த அ.தி.மு.க. அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக குறிப்பிட்டார். கல்வித்துறை, மருத்துவத் துறையில் அரசு செய்த சாதனைகளை அவர் பட்டியலிட்டார். மின்சார உற்பத்தியில் அ.தி.மு.க அரசு செய்த சாதனைகளையும் முதல்வர் பட்டியலிட்டார். இந்த கூ ட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் திரளாக கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த அமைச்சர் ஓ.எஸ். மணியனுக்கு முதல்வர் தனது பாராட்டுகளை தெரிவித்தார். முன்னதாக மயிலாடுதுறை செல்லும் வழியில் அவருக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, முன்னாள் அமைச்சர் சிவபதி உள்ளிட்ட பலரும் முதல்வரை வரவேற்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 3 days ago |
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
ஐ.நா.,வில் இந்திய பெண் கீதாவுக்கு முக்கியப்பதவி
23 Apr 2024வாஷிங்டன், இந்தோனேஷியாவில், ஐ.நா.,வின் ஒருங்கிணைப்பாளர் ஆக இந்தியாவைச் சேர்ந்த கீதா சபர்வால் என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
-
இந்து கடவுள்களை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி அவமதிக்கிறது: ராஜஸ்தானில் பிரதமர் மோடி பேச்சு
23 Apr 2024ஜெய்ப்பூர், ஹனுமன், ராமரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அவமதிக்கிறது என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி அறிக்கை
23 Apr 2024சென்னை, நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
-
மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
23 Apr 2024சென்னை, மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.