முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெங்களூர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் தனிமையில் பயிற்சி பெற்று வரும் டோனி

திங்கட்கிழமை, 18 ஜூன் 2018      விளையாட்டு
Image Unavailable

பெங்களூர் : இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது. இதில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் மகேந்திர சிங் டோனி இடம்பெற்றுள்ளார்.

இதில் இடம்பெற்றுள்ள வீரர்களுக்கான பிட்னஸ் தொடர்பான யோ யோ தேர்வு ஜூன் 15-ம் தேதி நடைபெற்றது. இதையடுத்து ஆப்கானிஸ்தானுடனான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பங்கேற்றது. 2 தினங்களுக்குள்ளாக இந்திய அணி இதில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் டோனி மட்டும் தனிமையில் பேட்டிங் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இதர வீரர்கள் அனைவரும் இல்லாத நிலையில், அவருக்கு உதவியாக வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்கூர் மட்டும் பந்துவீசி வருகிறார். மேலும் அங்குள்ள த்ரோ டௌன் ஸ்பெஷலிஸ்ட் ரகு உடனிருக்கிறார்.

உலகளவில் முன்னணி வீரர்களில் ஒருவராகத் திகழும் டோனியின் இந்த கடும் பயிற்சி அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த ஐ.பி.எல். தொடரில் கூட அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்து சிறப்பான ஆட்டத்திறனுடனேயே டோனி திகழ்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து