முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானம் இரு மடங்காக உயரும் - பிரதமர் நரேந்திர மோடி உறுதி

புதன்கிழமை, 20 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : 2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானம் இரு மடங்காக உயரும் என பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.

வீடியோ கான்பிரன்ஸிங்

பிரதமர் மோடி நாடு முழுவதும் 600 மாவட்டங்களில் உள்ள விவசாயிகளிடம் வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் உரையாற்றினார். பிரதமர் மோடி பேசுகையில்,  விவசாயத்திற்கான பட்ஜெட்டில் பா.ஜனதா ஆட்சியில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது, 2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானம் இரு மடங்காக உயரும் என குறிப்பிட்டார்.  விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. இதற்காக மத்திய பா.ஜனதா கூட்டணி அரசு விவசாய பட்ஜெட்டிற்கு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. விவசாயத்துக்காக பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் தொகை கடந்த 4 ஆண்டுகளில் இரட்டிப்பாக்கி ரூ.2.12 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

இரு மடங்காக ...

முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் 5 ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட தொகையைக் காட்டிலும் இது அதிகமாகும். 2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானம் இரு மடங்காக உயர்த்தப்படும் என்பது உறுதி. வேளாண்மையில் இருந்து விசாயிகளுக்கு கிடைக்கும் வருவாயை உயர்த்துவது, விவசாயத்தில் உள்ளீட்டுச் செலவை குறைப்பது, விளைபொருட்களுக்கு நியாயமான விலையைப் பெற்றுக்கொடுத்தல், விளைபொருட்கள் வீணாவதைத் தடுத்து, அதைப் பாதுகாத்து மாற்று வருமானத்துக்கு உதவி செய்தல் என்ற இலக்குடன் செயல்படுகிறது  என்று பிரதமர் மோடி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து