முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமேசுவரம் திருக்கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா தொடக்கம்: முதல் நாள் திருவிழா ராவணசம்ஹாரம் நிகழ்ச்சி.

புதன்கிழமை, 20 ஜூன் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

 ராமேசுவரம்-: ராமேசுவரம் திருக்கோயிலில் ராமலிங்கபிரதிஷ்டை திருவிழாவினை முன்னிட்டு முதல் நாள் திருவிழாவான ராவணசம்ஹாரம் நிகழச்சி  நேற்று நடைபெற்றது .
  ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் ஆண்டு தோரும் மூன்று நாட்கள் நடைபெரும் ராமலிங்கபிரதிஷ்டை திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு திருக்கோயிலுள்ள ராமநாதசுவாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில்  சிறப்பு பூஜைகளும்,தீபாராதனையும் காலையில் நடைபெற்றது.இதனை தொடர்ந்து திருவிழாவின் முதல் நாள் திருவிழாவான ராவணசம்ஹாரம் நிகழச்சியையொட்டி சுவாமி ராமர்,லெட்சுமணன்,சீதை,ஆஞ்சநேயர் ஆகியோர்கள் தங்க கேடயத்திலும்,ராவணன் கேடயத்திலும் திருக்கோயிலிருந்து   மாலை 5 மணிக்கு எருந்தருளி திருக்கோயிலின் நான்கு ரத வீதி மற்றும்,நகர் பகுதிகளில் வீதியுலா வந்து ராவணசம்ஹாரம் நிகழச்சி நடைபெறும் பகுதியான   ராமேசுவரம் திட்டக்குடி பகுதியில் தனுஸ்கோடி பகுதிக்கு  செல்லும் சாலைக்கு மாலை 5 மணிக்கு வந்து சேர்ந்தன. அங்கு திருக்கோயில் மூத்த குருக்கள் உதயகுமார் 10 தலையுடன் கூடிய ராவணனின் தலையை ராமபிரான் வதம் செய்வது போன்ற நிகழச்சியை நடத்தி வைத்தார்.பின்னர் சுவாமிக்கு  சிறப்பு பூஜையும்,தீபாராதனையும் நடைபெற்றது.இந்நிகழச்சியில் திருக்கோயில் இணை ஆணையர் மங்கையர்க்கரசி,திருக்கோயில் அலுவலர்கள், மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.        

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து