முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போலீசை விமர்சித்த நடிகை நிலானிக்கு 15 நாள் காவல்

வியாழக்கிழமை, 21 ஜூன் 2018      சினிமா
Image Unavailable

சென்னை : நடிகை நிலானியை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்திய போலீசாரை போலீஸ் உடையில் விமர்சித்து வீடியோ வெளியிட்டிருந்தார் நடிகை நிலானி. அவரது வீடியோ பெருமளவில் வைரலானது. இதைத் தொடர்ந்து அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த சென்னை வடபழனி போலீசார் குன்னூரில் அவரை கைது செய்தனர். குன்னூர் மாஜிஸ்ட்ரேட்டிடம் ஆஜர்படுத்தப்பட்ட நிலானி நேற்று காலை சென்னை அழைத்து வரப்பட்டார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்நிலையில் அவரை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். நிலானியை 15 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதனிடையே நிலானி தாக்கல் செய்த ஜாமீன் மனு வரும் 25-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து